பச்சிளம் குழந்தைகளுக்கும் தடுப்பூசி; அமெரிக்காவில் அனுமதி

பச்சிளம் குழந்தைகளுக்கும் தடுப்பூசி; அமெரிக்காவில் அனுமதி

2 mins read
6bfd5970-18d6-4777-a30c-f59eaf010f8d
அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள ஸ்கிப்பேக் மருந்தகத்தில் மே 19ஆம் தடுப்பூசி போட்டுக் கொண்ட ஐந்து வயது லிடியா ஜோன்ஸ். தற்போது ஐந்து வயதுக்கும்கீழ், அதாவது ஆறு மாதக் குழந்தைகளுக்கும் தடுப்பூசி போட அமெரிக்காவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ் -

நியூ­யார்க்: அெமரிக்­கா­வில் பச்­சி­ளம் குழந்­தை­க­ளுக்­கும் தவ­ழும் குழந்­தை­க­ளுக்­கும் தடுப்­பூசி போட அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது.

இதன் மூலம் இது­வரை தடுப்­பூசி போடாத எஞ்­சிய வய­துப் பிரி­வி­ன­ருக்­கும் தடுப்­பூசி போடப்­படு கிறது. சனிக்­கி­ழமை அன்று அமெ­ரிக்­கா­வின் 'சிடிசி' எனப்­படும் நோய்க்­கட்­டுப்­பாடு, தடுப்பு ஆலோ­ச­னைக் குழு­வில் நடை­பெற்ற வாக்­கெ­டுப்­பில் அனை­வ­ரும் கைக் குழந்­தை­க­ளுக்கு தடுப்­பூசி போடு­வ­தற்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­த­னர்.

இதை­ய­டுத்து ஆறு மாதங்­கள் முதல் நான்கு வயது வரை­யி­லான குழந்­தை­க­ளுக்கு ஃபைசரின் மூன்று முறை போடக்­கூ­டிய தடுப்­பூ­சிக்குப் பரிந்­து­ரைக்­கப்­பட்­டது.

ஆறு மாதங்­கள் முதல் ஐந்து வயது வரை­யி­லான குழந்தை களுக்கு மொடர்­னா­வின் இரு முறை தடுப்­பூசி போட­வும் 12-0 என்று வாக்­க­ளிக்­கப்­பட்­டது.

சிடி­சி­யின் இயக்­கு­நர் ரோச்­செல் வாலென்ஸ்கி, பரிந்­து­ரை­களில் கை ெயழுத்­திட்டு கைக்­கு­ழந்தை களுக்குத் தடுப்­பூசி போடும் முறை குறித்து அதி­கா­ரி­க­ளுக்கு ஆலோ­சனை வழங்­கி­னார்.

ஆயி­ரக்­க­ணக்­கான குழந்­தை ­க­ளுக்கான மருந்­த­கங்­க­ளி­லும் மருந்து விற்­பனை நிலை­யங்­க­ளி­லும் இவ்­வார இறு­தி­யில் இதர இடங்­க­ளி­லும் தடுப்­பூசி போடப்­படும் என்று 'சிடிசி' தெரிவித்தது.

"கிரு­மித்தொற்­றுக்கு எதி­ராக போரா­டும் நாட்­டுக்கு இது முக்­கிய முன்­னேற்­றம்," என்று அதி­பர் ஜோ பைடன் கூறியுள்ளார்.

"இந்­தத் தடுப்­பூ­சி­கள் பாது­காப் பானவை, ஆற்­றல் வாய்ந்­தவை. ெகாவிட்-19 தொற்­றி­லி­ருந்து குழந் தைக­ளைப் பாது­காப்­ப­தால் பெற் றோரும் நிம்­ம­தி­யோடு இருக்­க­லாம்," என்று அறிக்கை வாயி­லாக அதி­பர் பைடன் தெரி­வித்­தார்.

சிடி­சி­யின் அங்­கீ­கா­ரத்தை பெரும்­பா­லான பெற்­றோர் வர­வேற்று உள்­ள­னர். ஒன்­றரை வரு­டங்­க­ளுக்கு முன்பு தடுப்­பூசி அறி­மு­க­மா­ன­போது தங்­க­ளுடைய குழந்­தை­க­ளுக்­கும் ஏதா­வது ஒரு வகை­யில் பாது­காப்பு கிடைக்­காதா என்று அவர்­கள் ஏங்கினர்.

இருந்­தா­லும் சில பெற்­றோர் இன்­ன­மும் தயக்­கம் காட்­டு­வ­தால் அல்­லது ஊக்­க­மூட்ட வேண்­டி­யி­ருப்பால் ஐந்து முதல் 11 வயது வரை குழந்­தை­களில் 29 விழுக்­காட்­டினருக்கு மட்­டுமே தடுப்­பூசி போடப்படும் என்று சிடிசி கூறி­யுள்­ளது.

ஐந்து வயதுக்குக் கீழ் உள்ளவர் களுக்குத் தடுப்பூசி போடுவதற்காக ஏற்கெனவே ஃபைசர், மொடர்னா ஆகிய இரு தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களிடமிருந்து பத்து மில்லியன் முறை போடக்கூடிய தடுப்பூசிகளைப் பெற்று அமெரிக்க அரசாங்கம் இருப்பில் வைத்து உள்ளது.