மலேசிய முன்னாள் தூதர் பரமேஸ்வரன் காலமானார்

மலேசிய முன்னாள் தூதர் பரமேஸ்வரன் காலமானார்

1 mins read
9b117e7b-09a6-4e5f-ba25-658523a20b78
-

ஜோகூர் பாரு: சிங்­கப்­பூ­ருக்­கான முன்­னாள் மலே­சிய தூதர் பர­மேஸ்­வ­ரன் (படம்) கால­மா­னார் என்று 'த ஸ்டார்' ஏடு தெரி­வித்­தது. அவ­ருக்கு வயது 74. சென்ற வெள்­ளிக்­கி­ழமை இரவு 12.30 மணி­ய­ள­வில் இஸ்­கந்­தர் புத்­தி­ரி­யில் உள்ள அவ­ரது வீட்­டில் நினை­வின்­றிக் கிடந்­த­தாக நண்­பர் ஒரு­வர் மூலம் அறி­யப்­ப­டு­கிறது. அங்கு வந்த மருத்­துவ உத­வி­யா­ளர்­கள் அவர் மர­ண­ம­டைந்­து­விட்­ட­தாக தெரி­வித்­த­னர். இன்று திங்­கட்­கி­ழமை அவ­ரது இறு­திச்­ச­டங்கு நடை­பெ­றும் எனத் தெரி­கிறது. 2003 முதல் 2010 வரை­யில் சிங்­கப்­பூ­ருக்­கான மலே­சிய தூத­ராக அவர் பதவி வகித்­தார். ஆப்­பி­ரிக்கா, அமெ­ரிக்கா, ஆசியா, ஐரோப்­பா­வில் அவர் ஆறு பொறுப்­பு­களில் இருந்­துள்­ளார். நாற்­பது ஆண்­டு­க­ளுக்கு மேல் அவர் தூத­ரா­கப் பணி­யாற்­றி­யுள்­ளார். 1948ல் கோலா கங்­சா­ரில் பிறந்த அவர் 1969ல் மலே­சிய வெளி­நாட்டு சேவை­யில் ேசர்ந்­தார்.