மக்காவில் 12 பேர் திடீர் பாதிப்பு; மாபெரும் சோதனை நடத்த முடிவு

மக்காவில் 12 பேர் திடீர் பாதிப்பு; மாபெரும் சோதனை நடத்த முடிவு

1 mins read
5745fc98-4ada-406f-ba95-a7ef7942ec91
-

ஹாங்­காங்: மக்­கா­வில் புதி­தாக 12 பேருக்­குத் தொற்று ஏற்­பட்­டுள்­ள­தால் அடுத்த மூன்று நாட்­க­ளுக்கு மாபெ­ரும் கொவிட்-19 சோத­னையை நடத்தி வருகிறது.

கடந்த 250 நாள்­க­ளாக புதி­தாக யாரும் பாதிக்­கப்­ப­ட­வில்லை. ஆனால் திடீ­ரென மூவ­ருக்கு கொவிட்-19 தொற்று இருப்­பது கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

இந்த நிலை­யில் அவ­சி­ய­மில்­லாத வியா­பா­ரத் தளங்­களை மூடு­மா­றும் குடி­மக்­கள் வீட்­டி­லேயே தங்க வேண்­டும் என்­றும் மக்­கா­வின் சுகா­தா­ரத் துறை வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

ஞாயிறு தொடங்கி செவ்­வாய்க் கிழமை வரை அனை­வ­ருக்­கும் தொற்று சோதனை நடத்­தப்­படும் என்று அத் துறை­யின் அதி­கா­ரி­கள் தெரி­வித்து உள­ள­னர்.

அடுத்த அறிவிப்பு வரும்வரை பள்ளிக்கூடங்களை மூடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆனால் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை. உணவு, அத்தியாவசியப் பொருள்கள் போதுமான அளவு இருப்ப தால் மக்கள் வாங்கிக் குவிக்க அவசியம் இல்லை என்று மக்காவ் அரசாங்கம் கேட்டுக்கொண்டது.

இந்த நிலையில் புதிய தொற்றுக்கான மூலத்தைக் கண்டறியும் முயற்சியில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.