மலே­சி­யா­வில் ஒன்­றரை ஆண்­டுக்­குப் பின் கொவிட்-19 மர­ணங்­கள் இல்லை

மலே­சி­யா­வில் ஒன்­றரை ஆண்­டுக்­குப் பின் கொவிட்-19 மர­ணங்­கள் இல்லை

1 mins read
e5c8ef78-908e-44d5-8c39-7673d3d3875b
-

புத்ரஜயா: மலே­சி­யா­வில் 2020ஆம் ஆண்டு டிசம்­பர் 18ஆம் தேதிக்­குப் பின்­னர் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை முதன்­மு­றை­யாக கொவிட்-19 தொடர்­பான மர­ணங்­கள் ஏதும் பதிவாகவில்லை.

சுகா­தார அமைச்­சர் கைரி ஜமா­லு­தீன் தமது டுவிட்­டர் பக்­கத்­தில் ஞாயிற்­றுக்­கி­ழமை பின்­னி­ர­வில் இதைத் தெரித்­தார்.

"கொவிட்-19 தொற்­று­டன் வாழப் பழ­கிக் கொள்­ளும் நிலையை துல்­லி­ய­மாக மாற்றி அமைக்­கப்­பட்­டு எட்டப்பட்டுள்ளது. அது தரவு­ க­ளின் அடிப்­ப­டை­யில் ஆனது. இது நமக்கு தொடர்ந்து பயன் அளிக்­கும் என்று நம்­பு­வோம்," என்­றார் திரு கைரி.

மலே­சி­யா­வில் தொற்­றுப் பர­வல் தொடங்­கி­ய­தி­லி­ருந்து அதன் தொடர்­பான 35,732 மர­ணங்­கள் நிகழ்ந்து இருக்­கின்­றன.

நேற்­று­முன்­தி­னம், மலே­சி­யா­வில் புதி­யத் தொற்­றுச் சம்­ப­வங்­கள் குறைந்­தன. சனிக்­கி­ழமை 2,127 புதிய தொற்­றுச் சம்­ப­வங்­கள் பதி­வான நிலை­யில் ஞாயிற்­றுக் கிழமை 1,690 தொற்­றுச் சம்­ப­வங்­கள் பதி­வா­கின.

நாட்­டில் 25,944 பேருக்­குக் கிரு­மித்­தொற்று இருப்­ப­தாக சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது. 1,000 பேர் மருத்­து­வ­ம­னை­களில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளனர்.

இந்­நி­லை­யில், கடந்த வாரம், கொவிட்-19 தொற்று கார­ண­மாக மருத்­து­வ­ம­னை­க­களில் அனு­ம­திக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை கூடியது என சுகா­தார அமைச்­சின் தலைமை இயக்­கு­நர் நூர் இஷாம் அப்­துல்லா நேற்று கூறினார். கடந்த வாரம் மலே­சி­யா­வில் தொற்று 27.9 விழுக்­காடு உயர்ந்து, 14,195 புதிய தொற்­றுச் சம்­ப­வங்­கள் பதி­வா­கின.