வாஷிங்டன்: வாஷிங்டனில் முன்னனுமதி பெறாத இசை நிகழ்ச்சியில் நேற்றுமுன்தினம் இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் 15 வயது இளையர் ஒருவர் உயிர் இழந்தார். ஒரு காவல்துறை அதிகாரி உள்ளிட்ட மூன்று பேருக்குக் காயம் ஏற்பட்டது.
மொக்கேலா என்ற அந்த வீதி இசை நிகழ்ச்சியில் மாலையில் வன்முறை ஏற்பட்டதை அடுத்து, அந்நிகழ்ச்சியை நிறுத்தியதாக காவல்துறையினர் கூறினர்.
பின்னர் துப்பாக்கிச் சூடு எவ்வாறு நடந்தது என்பது சரியாகத் தெரியவில்லை. இருப்பினும் காவல்துறையினர் எந்தத் துப்பாக்கிச் சூடும் நடத்தவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.
காயம் அடைந்தவர்களின் உடல்நிலை சீராக உள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.

