பாரிஸ்: பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மெக்ரோனின் கட்சி நேற்றுமுன்தினம் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனது பெரும்பான்மையை இழந்ததால் அவருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் திரு மெக்ரோனின் தலைமையிலான கூட்டணிக்கு 246 இடங்கள் மட்டுமே கிடைத்தன.
பெரும்பான்மையை எட்ட அவரது தரப்பு 289 இடங்களைப் பெற்றிருக்க வேண்டும்.
சென்ற நாடாளுமன்றத்தில் 308 உறுப்பினர்கள் திரு மெக்ரோனுக்கு ஆதரவாக இருந்தனர்.
ஆனால் இந்தத் தேர்தலில் பிரான்சின் இடது சாரி, வலது சாரி இரண்டையும் சேர்ந்த கட்சிகளுக்கு அதிக இடங்கள் கிடைத்துள்ளன.
அதன் மூலம், பிரெஞ்சு அரசியல் பிளவு அரசியலை நோக்கி நகர்ந்துள்ளது.
திரு மெக்ரோனால் சில மாதங் களுக்கு முன்னர் நியமிக்கப்பட்ட பிரதமரான திருவாட்டி எலிசபெத் போர்ன், இதுபோன்ற நாடாளுமன்றம் பிரான்சுக்கு தேசிய அளவிலும் அனைத்துலக அளவிலும் அபாயத்தை ஏற்படுத்தும் என்றார். அவர் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை உருவாக்க முயற்சி செய்யப்போவதாகவும் கூறினார்.
ஆனால் அது எளிதல்ல என்று அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
சில மாதங்களுக்கு முன்னர் இரண்டாம் தவணையை வென்ற திரு மெக்ரோனுக்கு நாடாளுமன்றத்தில் சட்டங்களை இயற்றுவது பெரும்பாடாக இருக்கும் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

