ரஷ்ய செய்தியாளர் ஒருவர் தமக்கு கிடைத்த நோபெல் பதக்கத்தை $144 மில்லியனுக்கு ஏலத்தில் விற்றுள்ளார். இதிலிருந்து கிடைத்த பணம் அனைத்தையும் போரால் பாதிக்கப்பட்ட உக்ரேனிய சிறுவர்களுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.
டிமிட்ரி முரடோவுக்கு 2021ல் நோபெல் பரிசு கிடைத்தது. அமைதி, ஜனநாயகத்திற்கான அடிப்படையாக கருத்து சுதந்திரம் இருப்பதை வலியுறுத்தியதற்காக இவருக்கு விருது வழங்கப்பட்டது.
“நோவாஜா கெஜெட்டா என்ற செய்தித்தாளின் துணை நிறுவனரான முரடோவ், பல ஆண்டுகளாக கடும் சவாலான சூழ்நிலையில் ரஷ்யாவில் கருத்து சுதந்திரத்தைப் பாதுகாத்து வருவதாகக் கூறினார்.
இந்நிலையில் உக்ரேனை ஆக்கிரமிக்க முயற்சிசெய்து வரும் ரஷ்யாவுக்கு எதிராக யார் குரல் எழுப்பினாலும் அவர்களை சிறையில் அடைத்துவருகிறது அந்நாட்டு அரசாங்கம். இதனால் மார்ச் மாதம் தமது செய்தித்தாள் நிறுவனத்தை முரடோவ் மூடினார்.
போரால் அதிகம் பாதிக்கப்படுவது சிறுவர்கள். அவர்களுக்கு உதவுவதுதான் நமது தலையாயக் கடமை என்றார் முரடோவ்.