தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பங்ளாதேஷ் வெள்ளம்: தவிக்கும் 1.6 மி. சிறுவர்கள்

2 mins read
7c46027a-51fe-47d8-87f9-1619cbec3970
பங்ளாதேஷின் குடியிருப்புப் பகுதி ஒன்றில்உணவு உதவிக்காகக் காத்திருக்கும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள். இந்நாட்டில் 1.6 மில்லியன் சிறுவர்கள் உள்பட குறைந்தது நான்கு மில்லியன் மக்கள் வீடுகளின்றி தவிப்பதாக ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் 'யூனிசெஃப்' அமைப்பு தெரிவித்துள்ளது. படம்: ஏஎஃப்பி -

டாக்கா: வட­கி­ழக்கு பங்­ளா­தே­ஷில் வெள்­ளத்­தால் பாதிக்­கப்­பட்­டுள்ள 1.6 மில்­லி­யன் சிறு­வர்­கள் உள்­பட குறைந்­தது நான்கு மில்­லி­யன் மக்­க­ளுக்கு அவ­சர உதவி தேவைப்­ப­டு­வ­தாக 'யூனி­செஃப்' எனும் ஐக்­கிய நாட்டு நிறு­வ­னத்­தின் சிறு­வர் நிதியம் கூறி­யுள்­ளது. பாதிக்­கப்­பட்ட பகு­தி­ளுக்­குச் சென்று சிறு­வர்­க­ளைக் காப்பாற்றி உட­ன­டி­யாக தண்­ணீ­ரை­யும் சுகா­தா­ரப் பொருள்­க­ளை­யும் வழங்­கும் முயற்­சி­க­ளைத் தான் எடுத்து வரு­வ­தாக 'யூனி­செஃப்' அறிக்கை ஒன்­றில் தெரி­வித்­தது.

"சிறு­வர்­க­ளுக்­குச் சுத்­த­மான குடி­நீர் தற்­போது தேவை. நீரில் பர­வும் மர­ணம் விளை­விக்­கக்­கூடிய நோய்­க­ளைத் தவிர்ப்­பது மிகுந்த கவலை தரும் பல அம்­சங்­களில் ஒன்று," என்று பங்­ளா­தே­ஷுக்­கான 'யூனி­செஃப்' பிர­தி­நி­தி­யான திரு ஷெல்­டன் யெட் சொன்­னார். ஒரு வாரத்­திற்கு 80,000 குடும்­பங்­க­ளுக்கு உத­வக்­கூ­டிய 400,000 நீர் சுத்­தி­க­ரிப்பு மாத்­தி­ரை­களை 'யூனி­செஃப்' விநி­யோ­கித்­தி­ருப்­ப­தாக அவர் குறிப்­பிட்­டார்.

மில்­லி­யன் கணக்­கான நீர் சுத்தி­க­ரிப்பு மாத்­தி­ரை­களை வழங்கி பங்­ளா­தேஷ் அர­சாங்­கத்­திற்கு உதவ முயற்­சி­களை எடுத்து வரு­வ­தாகவும் 'யூனி­செஃப்' சொன்­னது. மேலும், 10,000க்கும் அதி­க­மான 'ஜெரி கேன்ஸ்' எனப்­படும் தண்­ணீர் கொள்­க­லன்­கள், பெண்­க­ளுக்­கான ஆயி­ரக்­க­ணக்­கான சுகா­தார மேம்­பாட்டுச் சாத­னங்­கள் ஆகி­ய­வற்றை வழங்­க­வும் திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது.

அதன் வட்­டா­ரங்­களில் உள்ள சுகா­தார நிலை­யங்­க­ளுக்கு அவ­சர தேவைக்­கான மருத்­து­வப் பொருள்­களை வழங்­கும் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தா­க­வும் 'யூனி­செஃப்' கூறியது.

பங்­ளா­தே­ஷை­யும் இந்­தி­யா­வை­யும் பாதித்­துள்ள இந்த வெள்­ளத்­தில் குறைந்­தது 116 பேர் மர­ண­மடைந்­த­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர். பங்­ளா­தே­ஷில் மாண்ட குறைந்­தது 38 பேரும் அவர்­களில் அடங்­கு­வர்.

வெள்­ளத்­தால் பாதிக்­கப்­பட்ட சில பகு­தி­களை பங்­ளா­தேஷ் பிர­த­மர் ஷேக் ஹசீனா நேற்று நேரில் சென்று பார்­வை­யிட்­டார்.

அண்­மைக் கால­மாக தெற்­காசிய நாடு­கள் எதிர்­பா­ராத மோச­மான பரு­வ­நி­லை­யால் அதி­கம் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. பரு­வ­நிலை மாற்­றத்­தால் மேலும் பயங்கரமான பேரி­டர்­கள் ஏற்­ப­ட­லாம் என்று சுற்­றுப்­புற வல்­லு­நர்­கள் எச்­ச­ரித்து வந்துள்­ள­னர்.