ஜகார்த்தா: இந்தோனீசிய அதிபரும் ஜி-20 அமைப்பின் தற்போதைய தலைவருமான ஜோக்கோ விடோடோ, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடன் இம்மாதம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்தோனீசியாவின் பாதுகாப்பு அமைச்சர் இந்தத் தகவலைத் தெரிவித்ததாக அந்நாட்டின் அரசாங்கத்திற்குச் சொந்தமான அமைப்பு ஒன்று கூறியது.
ஜி-20 அமைப்பைச் சேர்ந்த முக்கிய பொருளியல் நாடுகள் இவ்வாண்டு மேற்கொள்ளவிருக்கும் சந்திப்புக்கு உக்ரேன் போரால் பாதிப்பு வந்துள்ளது. சந்திப்பைப் புறக்கணிக்கப்போவதாகவும் அதிலிருந்து ரஷ்யாவை வெளியேற்ற முயற்சி எடுக்கப்போவதாகவும் மேற்கத்திய நாடுகள் கூறி வருகின்றன. அதனால் ஜி-20 நாடுகளை ஒற்றுமையாக வைத்திருக்க இந்தோனீசியா சிரமப்பட்டு வந்துள்ளது.
இம்மாதம் 30ஆம் தேதியன்று ேஜாக்கோவி என்றழைக்கப்படும் திரு விடோடோ, திரு புட்டினைச் சந்திப்பார் என்று அந்தாரா செய்தி நிறுவனம் தெரிவித்தது. ரஷ்ய அரசாங்கத்திற்குச் சொந்தமான டாஸ் ஊடகமும் இதை உறுதிப்படுத்தியது.
மாஸ்கோவிற்குப் பயணம் மேற்கொள்வதற்கு முன்பு ஜி-7 சந்திப்பு ஒன்றில் கலந்துகொள்ள திரு விடோடோ ஜெர்மனிக்குப் பயணம் மேற்கொள்வார்.

