ஹாங்காங்: ஹாங்காங்கிற்கு அருகே உள்ள உலகின் ஆகப் பெரிய சூதாட்ட மையமான மக்காவில் ஒரு ஹோட்டலிலும் சூதாட்ட சுற்றுலா தலத்திலும் முடக்கநிலை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. அங்கு கொவிட்-19 கிருமிப் பரவல் ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்நிலை உருவெடுத்துள்ளது.
அங்கிருந்த 700 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அங்குள்ள நூற்றுக்கணக்கானோருக்கு கொவிட்-19 பரிசோதனைகளை மேற்கொள்ள அரசாங்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

