ஆஃப்கானிஸ்தான் நிலநடுக்கம்: குறைந்தது 950 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் இன்று(ஜூன் 22) அதிகாலை நிகழ்ந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 950 பேர் உயிர் இழந்துள்ளனர்.


தென்கிழக்கு ஆப்கானிஸ்தானின் பக்திகா மாநிலத்தில் உள்ள கோஸ்ட் நகரில் இருந்து 44 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.


ரிக்டர் அளவில் 6.1 புள்ளியாக நிலநடுக்கம் பதிவானது என்றும் 51 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது என்றும் அமெரிக்க நிலநடுக்கவியல் துறை தெரிவித்து இருந்தது.


மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட நில அதிர்வுகளை ஆஃப்கானிஸ்தானில் கிட்டத்தட்ட 119 மில்லியன் மக்கள் உணர்ந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


இடிபாடுகளை அகற்றி அதில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. சக்தி வாய்ந்த நில நடுக்கம் அண்டை நாடான பாகிஸ்தானிலும் உணரப்பட்டது. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத், லாகூர், முல்தான், குவெட்டா உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது.


சில வினாடிகள் நீடித்த இந்த நில நடுக்கத்தால் அதிர்ச்சி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!