ஹாங்காங்: ஹாங்காங்கில் எற்பட்ட தீயால், அங்குள்ள 20,000 வீடுகளில் இரண்டு நாள்களுக்கு மின்வசதி தடைபட்டுள்ளது.
நேற்றுமுன்தினம் இரவு நடந்த அச்சம்பவம் பற்றி ஹாங்காங் அரசாங்கம் விசாரணை கோரியுள்ளது. ஹாங்காங்கின் வடக்கில் உள்ள யுவென் லோங் வட்டாரத்தில் தனது மின்கம்பிப் பாலங்கள் தீப்பிடித்துக்கொண்டதாக (படம்) சிஎல்பி பவர் எனும் மின் நிறுவனம் கூறியது. யாருக்கும் அதில் காயமில்லை. சுமார் 160,000 வாடிக்கையாளர்களுக்கு மின்சாரம் தடைபட்டது. ஆனால் பெரும்பாலானோருக்கு மீண்டும் மின் இணைப்பு கிடைத்துவிட்டது.
ஹாங்காங்கில் பெரிய மின்தடை ஏற்படுவது அரிது.