மலேசியாவிற்கு 1.2 மில்லியன் வெளிநாட்டு ஊழியர்கள் தேவை

மலேசியாவிற்கு 1.2 மில்லியன் வெளிநாட்டு ஊழியர்கள் தேவை

1 mins read
008826bd-f42c-473c-8fe0-8843cf05ba57
-

கோலா­லம்­பூர்: உல­கில் இரண்­டா­வது ஆக அதிக அள­வில் செம்­பனை எண்­ணெய்யை உற்­பத்தி செய்­யும் நாடான மலே­சி­யா­வில் தோட்ட, உற்­பத்தி, கட்­டு­மா­னத் துறை­களில் குறைந்­தது 1.2 மில்­லி­யன் வெளி­நாட்டு ஊழி­யர்­கள் தேவைப்­ப­டு­கின்­ற­னர். பொரு­ளி­யல் நட­வ­டிக்­கை­கள் மீண்­டும் அதி­க­ரிப்­ப­தை­யொட்டி இந்­நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த ஏப்­ரல் மாதம் மலே­சியா அதன் எல்­லை­க­ளைத் திறந்­தது. எனி­னும், அங்கு வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளின் எண்­ணிக்கை அவ்­வ­ளவு அதி­க­ரிக்­க­வில்லை. வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்கு அர­சாங்­கம் அனு­மதி வழங்­கு­வதில் தாம­தம் ஏற்­ப­டு­வது போன்­றவை அதற்­கான கார­ணங்­கள்.

இதற்­கி­டையே, மலே­சி­யா­வின் செம்­பனை எண்­ணெய் நிறு­வ­ன­மான குலிம் பெர்­ஹாட், கொள்­ளை­நோய்ப் பர­வல் காலத்­திற்­குப் பிறகு முதன்­மு­றை­யாக வெளி­நாட்டு ஊழி­யர்­களை நிய­மித்­துள்ளது. இந்­தோ­னீ­சி­யா­வின் லொம்­பொக் தீவி­லி­ருந்து 37 பேரை வேலைக்கு எடுத்­த­தாக அந்­நி­று­வ­னம் தெரி­வித்­தது.