சிங்கப்பூர்: உலகில் நிகழவிருந்த கொவிட்-19 தொற்று மரணங்களை தடுப்பூசி பாதியாகக் குறைத்துள்ளது. அதாவது தடுப்பூசி அறிமுக மான முதல் ஆண்டில் 19.8 மில்லியன் மரணங்கள் தடுக்கப்பட்டதாக 'த லான்ெசட்' தொற்றுநோய் சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரை தெரிவிக்கிறது.
தடுப்பூசியை பெரிதும் நம்பியிருந்த அதிக வருமானம் கொண்ட நாடுகளில் பெரும்பாலான மரணங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன என்று ஆய்வின் ஆசிரியர் கூறினார்.
2020 டிசம்பர் 8ஆம் தேதி தடுப்பூசி தொடங்கப்பட்ட முதலாம் ஆண்டில் யாருக்கும் தடுப்பூசி போடாமல் இருந்திருந்தால் 31.4 மில்லியன் பேர் உயிரிழந்திருக்கலாம் என்று இம்பீரியல் காலேஜ் லண்டனைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தெரிவித்த னர்.
இருந்தாலும் தடுப்பூசியால் இவர்களில் 19.8 மில்லியன் பேர் காப்பாற்றப்பட்டனர் என்று ஆய்வின் முன்னணி ஆசிரியர் டாக்டர் ஓலிவர் வாட்சன் குறிப்பிட்டார்.
ஏறக்குறைய 185 நாடுகள், வட்டாரங்களில் நிகழ்ந்த அதிகமான இறப்புகளின் அடிப்படையில் மதிப்பீடுகள் செய்யப்பட்டன.
அதிக மக்கள் தொகை, கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக சீனா இந்த ஆய்வில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. இது, ஆய்வின் பொதுவான கண்டுபிடிப்புகளில் மாற்றத்தை ஏற்படுத்தலாம்.
தொற்றுநோய் இல்லாமல் ஒரு வருடத்தில் பொதுவாக நிகழும் மரணங்களைவிட கூடுதல் இறப்புகள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கிருமித்தொற்றால் ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
பல குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் தடுப்பூசி இலக்குகளை அறிமுகப்படுத்தப்பட்ட முதல் ஆண்டில் எட்ட முடியாததால் ஆயிரக்கணக்கானவர்கள் இறந்தனர்.
உலகளாவிய கோவேக்ஸ் தடுப்பூசி பகிர்வு திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட தடுப்பூசி இலக்கான 20 விழுக்காட்டை அந்த காலகட்டத்தில் நாடுகள் அடைய முடிந்திருந்தால் கூடுதலாக 156,900 இறப்புகள் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.
மேலும் உலக சுகாதார நிறு வனத்தின் 2021 கொவிட்-19 தடுப்பூசி இலக்கில் 40 விழுக்காட்டை ஒவ்வொரு நாடும் எட்டியிருந்தால் மேலும் 599,300 மரணங்கள் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்று ஆய்வு மதிப்பிட்டுள்ளது.

