வாஷிங்டன்: அமெரிக்க செனட் சபையில் துப்பாக்கிகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதையடுத்து இவ்வார இறுதியில் இந்த மசோதா மீது இறுதிக்கட்ட வாக்கெடுப்பு நடத்தப்படும்.
தற்காப்புக்காக கைத்துப்பாக்கியை வைத்திருப்பது அமெரிக்கர்களின் உரிமை என்று வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ள நிலையில் துப்பாக்கிப் பாதுகாப்பு மசோதாவுக்கு செனட் சபை ஒப்புதல் அளித்து உள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புவாய்ந்த தீர்ப்பும், துப்பாக்கிப் பாதுகாப்புக்கு செனட் சபை எடுத்துள்ள நடவடிக்கையும் ஆயுதம் தொடர்பான விவகாரத்தில் நாட்டை பிளவுபடுத்தியிருக்கிறது. கடந்த சில மாதங்களாக உவால்டே, டெக்சஸ், பஃப்ளோ, நியூயார்க் ஆகிய இடங்களில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 30க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அவர்களில் 19 குழந்தைகளும் அடங்குவர்.
செனட் சபையில் மசோதாவுக்கு ஆதரவாக 65 வாக்குகளும் எதிராக 33 வாக்குகளும் பதி வாகின. ஆளும் ஜனநாயகக் கட்சி எம்.பி.க்கள் மற்றும் சில குடியரசுக் கட்சி எம்.பி.க்கள் ஆதரவுடனும் செனட் சபையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
அமெரிக்கர்களையும் பள்ளி மற்றும் சமூகத்தில் உள்ள குழந்தைகளையும் பாதுகாக்க இந்த மசோதா உதவும் என்று வாக் களிப்புக்குப் பிறகு பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார். அமெரிக்காவில் தனி நபா்கள் சக்திவாய்ந்த துப்பாக்கி களை வைத்திருப்பதற்கு அந் நாட்டு அரசமைப்புச் சட்டம் அனுமதியளிக்கிறது.

