புடாபெஸ்ட்: ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டில் உலக சாம்பியன்ஷிப் போட்டியின்போது நீச்சல் குளத்தில் மூழ்கிக் கிடந்த அனிதா அல்வாரெஸை அவரது பயிற்றுவிப்பாளர் கவனித்து மீட்டார்.
அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த அல்வாரெஸ் குறைந்தது இரண்டு நிமிடங்களுக்கு சுவாசிக்காமல் இருந்திருக்கலாம் என்று பயிற்றுவிப்பாளர் ஆண்ட்ரியா ஃபுவென்டஸ் தெரிவித்தார்.
அவரது நுரையீரல்களில் நீர் புகுந்து விட்டதால் இரண்டு நிமிடங்களுக்கு மூச்சு இல்லை என்றார் நான்கு முறை ஒலிம்பிக் கலைநய நீச்சல் போட்டியில் பதக்கம் பெற்ற பயிற்றுவிப்பாளர்.
வாந்தியெடுத்தார், இருமினார், அதன் பிறகு அவருக்கு மூச்சு திரும்பியது என்று அவர் கூறினார். அல்வாரெஸ், 25, புதன்கிழமை இரவு நடைபெற்ற தனிநபர் இறுதிப் போட்டியை முடித்தவுடன் நீச்சல் குளத்தில் மயங்கிய நிலையில் காணப்பட்டார். அப்போது நீச்சல் குளத்தில் குதித்து அல்வாரெஸை பயிற்று விப்பாளர் காப்பாற்றினார்.
இதற்கிடையே உயிர்க்காப்பாளர்கள் விரைந்து செயல்படாததால் உள்ளூர் ஏற்பாட்டாளர்களும் உள்ளூர் விளையாட்டு ஒழுங்குமுறை அமைப்புகளும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றனர்.

