நார்வேயில் துப்பாக்கிச் சூடு: இருவர் பலி

நார்வே தலைநகர் ஒஸ்லோவில் உள்ள ஒரு கேளிக்கை விடுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் இருவர் மாண்டனர். இந்தச் சம்பவத்தை பயங்கரவாதச் செயல் என அந்நாட்டு காவல் துறை விசாரித்துவருகிறது.

நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள மூன்று இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இச்சம்பவத்தில் 21 பேர் காயமடைந்தனர். இதில் பத்து பேருக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது.

இதன் தொடர்பில் ஈரானிய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு நார்விஜியன் நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஏற்கெனெவே போதைப் பொருள், கத்தி போன்ற பொருள்களை வைத்திருந்ததற்காக அந்த நபர் சிலமுறை கைதுசெய்யப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூட்டை ஒருவர் மட்டும் நடத்தியதாக காவல் துறை தெரிவித்தது.

விடுதிக்கு வெளியே வந்துநின்ற சந்தேக நபர், பையிலிருந்து ஒரு துப்பாக்கியை எடுத்து சுட ஆரம்பித்ததாக சம்பவத்தைப் பார்த்தவர்கள் கூறினர்.

ஓரினச் சேர்க்கையாளர்கள் விரும்பிச் செல்லும் விடுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதால், இன்று இடம்பெற இருந்த பிராய்ட் ஊர்வலம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நார்வே நாட்டில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் மிக அரிது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!