அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆடவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
தனது வீட்டிற்கு அருகே உள்ள வாகன நிறுத்துமிடத்தில் வாடகைக்கு எடுக்கப்பட்ட வாகனத்தின் பின்னால் உள்ள இருக்கையில் சத்னம் சிங் எனும் அந்த 31 வயது ஆடவர் இருந்தார்.
சனிக்கிழமையன்று (25 ஜூன்) துப்பாக்கி ஏந்திய நபர் ஒருவர் அவரை சுட்டதாக 'தி நியூயார்க் டெய்லி' ஊடகம் தெரிவித்தது.
தாக்குதலை மேற்கொண்டவர் திரு சிங்கிற்குக் குறிவைத்தாரா அல்லது வாகனத்தின் ஓட்டுநருக்குக் குறிவைத்தாரா என்பதை அறியும் முயற்சியில் துப்பறிவாளர்கள் இறங்கியுள்ளனர்.
ஆகக் கடைசி நிலவரப்படி யாரும் கைதுசெய்யப்படவில்லை.
மேரிலேண்ட் மாநிலத்தில் சில நாள்களுக்கு முன்பு நிகழ்ந்த தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் மாண்டார்.
அதற்குப் பிறகு இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.