அமெரிக்காவில் மூச்சுத்திணறி மாண்ட 46 குடியேறிகள்

அமெரிக்காவின் சான் அன்டோனியோ நகரில் யாரும் கவனிக்காமல் விட்டுச்செல்லப்பட்ட லாரியில் குறைந்தது 46 குடியேறிகள் மாண்டுகிடந்தனர்.

கடந்த திங்கட்கிழமையன்று (27 ஜூன்) காவல்துறையினர் லாரியைத் திறந்து பார்த்தபோது அதிர்ச்சியில் உறைந்தனர்.

அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் ஆள் கடத்தலில் ஈடுபடுவோரால் இந்தக் கொடுமை நிகழ்ந்திருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.

குற்றுயிரும் குலையுயிருமாக இருந்த ஏறத்தாழ 16 பேர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

கடுமையான வெப்பம், சோர்வு ஆகியவற்றால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரில் நான்கு சிறுவர்களும் அடங்குவர்.

இச்சம்பவம் தொடர்பாக மூவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடியேறிகள் மூச்சுத்திணறி மாண்ட இச்சம்பவம் மீளாத் துயரத்தைத் தருவதாக மெக்சிகோவின் வெளியுறவு அமைச்சர் மார்சேலோ எப்ரார்ட் டுவிட்டரில் பதிவிட்டார்.

பாதிக்கப்பட்ட குடியேறிகள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதை அமெரிக்க அதிகாரிகள் இன்னும் உறுதி செய்யவில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!