அமைதியான முறையில் போராட்டம்: பேங்காக்கில் ஒதுக்கப்பட்ட 7 இடங்கள்

அமைதியான முறையில் போராட்டம்: பேங்காக்கில் ஒதுக்கப்பட்ட 7 இடங்கள்

1 mins read
7c3ed581-b916-4fbe-b58e-2b46b0b55805
-

பேங்­காக்: அண்மை வாரங்­க­ளாக தாய்­லாந்­துத் தலை­ந­க­ரம் பேங்­காக்­கில் நடத்­தப்­பட்ட அர­சாங்க எதிர்ப்­புப் போராட்­டங்­க­ளால் வழக்­க­நிலை பெரி­தும் பாதிப்­ப­டைந்­தது.

இத்­த­கைய இடை­யூ­று­கள் இனி நிக­ழா­தி­ருக்க அமை­தி­யான முறை­யில் போராட்­டம் நடத்த பேங்­காக்­கில் ஏழு இடங்­கள் ஒதுக்­கப்

­பட்­டுள்­ளன.

நாட்­டின் நிலைத்­தன்மை, பொது­மக்­கள் பாது­காப்பு ஆகி­ய­வற்றை நிலை­நாட்ட இந்த நட­வ­டிக்கை அவ­சி­யம் என்று பேங்­காக்­கின் புதிய ஆளு­ந­ரான சட்­சார்ட் சிட்­டி­புன்ட் தெரி­வித்­தார்.

பிரா நக்­கோன் மாவட்­டத்­தில் உள்ள முயேங் டவுன் ஸ்கு­வேர், டின்­டேங் வட்­டா­ரத்­தில் உள்ள பேங்­காக் இளை­யர் மையம் உட்­பட ஏழு இடங்­களில் பொது­மக்­கள்

அமை­திப் போராட்­டத்­தில் ஈடு­பட்டு தங்­கள் அதி­ருப்­தி­யைத் தெரி­யப்­

ப­டுத்­த­லாம் என்று தாய்­லாந்து

அர­சாங்­கம் கூறி­யது.

இந்த இரண்டு இடங்­களும் ஜன­நா­ய­கச் சின்­னம், வெற்­றிச் சின்­னம் ஆகிய இரண்டு இடங்­க­ளுக்கு அரு­கில் அமைந்­துள்­ளன.

ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­கள் இங்கு கூடு­வது வழக்­கம் என்று

அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

அமை­தி­யான முறை­யில் போராட்­டம் நடத்த ஒதுக்­கப்­பட்ட ஏனைய இடங்­கள் பேங்­காக்­கின் மையப் பகு­தி­யி­லி­ருந்து சற்று தூர­த்தில் உள்­ளன.

திறந்தவெளி­கள், விளை­யாட்டு மைதா­னங்­கள், பூங்கா ஆகி­யவை அவற்­றில் அடங்­கும்.

கொவிட்-19 தொடர்­பான கட்டுப்­பா­டு­களை தாய்­லாந்து தளர்த்தி வரும் நிலை­யில், அர­சாங்­கத்­துக்கு எதி­ரான போராட்­டங்­களும்

மீண்­டும் தொடங்கியுள்ளன.