பிலிப்பீன்ஸ் அதிபராக அந்த நாட்டின் முன்னாள் சர்வாதிகாரியின் மகன் பதவியேற்றுள்ளார். 64 வயதான ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் சென்ற மாதம் நடைபெற்ற தேர்தலில் அபார வெற்றி பெற்றார்.
1986ல் பிலிப்பீன்சில் 'மக்கள் சக்தி' எழுச்சி கண்டபோது, மார்கோஸ் ஜூனியருடைய தந்தையின் 20 ஆண்டுகால சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வந்தது. பல ஆண்டுகளாக மார்கோஸ் குடும்பத்தினர் ஆட்சியை மீண்டும் பெற போராடிவந்துள்ளனர்.
தலைநகர் மணிலாவில் பதிவியேற்பு நிகழ்ச்சியில் சற்றுமுன் இடம்பெற்றது.
பொருளியல் வளர்ச்சியை ஊக்குவித்தல், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துதல், உணவு உற்பத்தியை அதிகரித்தல் ஆகியவை தமது முன்னுரிமைகளாக இருக்கும் என அதிபர் மார்கோஸ் தேர்தல் பிராசாரத்தின்போது வாக்குறுதி அளித்திருந்தார்.

