ஜகார்த்தா: இந்தோனீசியாவின் பாப்புவா வட்டாரத்தில் புதிதாக மூன்று மாநிலங்களை உருவாக்குவதற்கான சட்டத்தை அந்நாடு நிறைவேற்றியது. இது அங்கு வாழும் மக்களின் சிறப்பு சுயாட்சி அதிகாரங்களுக்கு அச்சுறுலதாக இருக்கும் என்று எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.
ஆனால், அரசாங்கமோ புதிய மாநிலங்கள் பிரிக்கப்படுவதன் மூலம் அங்கு வளர்ச்சிப் பணிகளை ஊக்குவிப்பதோடு, அங்கு வாழும் பாப்புவா மக்களுக்கு அரசாங்கப் பணிகள் வழங்க முடியும் என்று கூறியுள்ளது.
இப்போது பாப்புவா மற்றும் மேற்கு பாப்புவா ஆகிய இரண்டு பிரிவுகளாக உள்ள அப்பகுதிகள், புதிய சட்டத்தின்படி பாப்புவா, மத்திய பாப்புவா, ஹைலேண்ட் பாப்புவா என மேலும் மூன்று மாநிலங்கள் உருவாக்கப்படும். இந்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பாப்புவா மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

