தோக்கியோ: அனைத்து நாடுகளின் அரசாங்களுக்கும் தன் மக்களையும் அவர்களின் வாழ்வாதாரங்களையும் பாதுகாக்க வேண்டிய கடமை உள்ளது. அதுபோல ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்யும் தலிபான் இயக்கமும் தங்கள் நாட்டில் நிகழும் மனிதாபிமான நெருக்கடியை நிறுத்த வேண்டும். அதற்கு தலிபான்கள் அனைத்துலக சமூகத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று ஜப்பான் கேட்டுக்கொண்டுள்ளது.
ஆப்கானிஸ்தானின் மலைசார்ந்த பகுதியான கிழக்குப் பகுதியில் கடந்த ஜூன் 22ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பலியாயினர். ஏராளமானோர் கடுமையாகக் காயமடைந்தனர்.
நிலநடுக்கத்தில் வீடுகளை இழந்து தவிப்போருக்கு அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகள், போர்வை, கூடாரம் போன்ற நிவாரணப் பொருட்களை அனைத்துலக தொண்டூழிய அமைப்புகள் மூலம் அளித்தன.
இந்நிலையில் அந்த நிவாரணப் பொருள்கள் மக்களுக்கு முறையாக விநியோகிக்கப்பட்டனவா என்பதை உறுதிசெய்ய முடியவில்லை என்று கூறப்படுகிறது.

