பாரிஸ் தாக்குதல்: முக்கிய குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

பாரிஸ் தாக்குதல்: முக்கிய குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

1 mins read
f18717db-567d-413f-aa6c-a01094511d2d
-

பாரிஸ்: 2015ஆம் ஆண்டு நவம்­பர் 13ஆம் நடந்த தாக்­கு­தல்­களில் பாரி­ஸில் உள்ள பட்­டகி­ளான் இசை­ய­ரங்­கம், ஆறு மது­பா­னக்­கூடங்­கள் மற்­றும் உண­வ­கங்­க­ளி­லும் பிரான்­சின் விளை­யாட்­ட­ரங்­கம் ஒன்­றை­யும் இலக்­கா­கக் கொண்டு நடத்­தப்­பட்ட தாக்­கு­த­லுக்கு உத­வி­பு­ரிந்­த­தாக குற்­றம் சாட்­டப்­பட்ட மேலும் 19 பேருக்­கும் நேற்று முன்­தி­னம் பிரஞ்சு நீதி­மன்­றம் தீர்ப்­ப­ளித்­தது.

நீதி­மன்­றத்­தின் இந்­தத் தீர்ப்பை பாரிஸ் மேயர் ஆனி ஹிடல்கோ வர­வேற்­றுள்­ளார். "மனித இனத்­திற்கு எதி­ரா­கப் பயங்­க­ர­வா­தத் தாக்­கு­தல் மேற்­கொண்டு நமது நக­ரத்­தை­யும் நாட்­டை­யும் துக்­கத்­தில் ஆழ்த்­தி­னர். அவர்­களை நீதி­யின் முன் திருத்தி பதி­லடி கொடுத்­தி­ருக்­கி­றோம். இது நமது ஜன­நா­ய­கத்­தின் வலு­வைப் பறை­சாற்­று­கிறது. 2015 பயங்­க­ர­வா­தத் தாக்­கு­த­லில் பலி­யா­ன­வர்­க­ளை­யும் அவர்­க­ளது குடும்­பத்­தி­ன­ரை­யும் பாரிஸ் நக­ரம் எப்­போ­தும் மற­வாது. நாம் எப்­போ­தும் அவர்­க­ளுக்கு உறு­து­ணை­யாக அவர்­கள் பக்­கம் நிற்­போம்," என்று மேயர் ஹிடல்கோ தெரி­வித்­துள்­ளார்.

பட்­டகி­ளான் தாக்­கு­த­லில் மட்­டும் 90 பேர் மாண்­ட­னர். அந்­தத் தாக்­கு­த­லில் உயிர் பிழைத்த திரு ஆர்­தர் டெனோ­வெக்ஸ் என்­ப­வர் "நீதி­மன்­றத்­தின் இந்­தத் தீர்ப்பு ஒரு நியா­ய­மான தீர்ப்பு என்று கூறி­யுள்­ளார். தாக்­கு­தல் நடந்­த­போது அதி­ப­ராக இருந்த திரு ஃப்ரோசுவா போலந்­தும் இந்­தத் தீர்ப்பை வர­வேற்­றுள்­ளார்.

"குற்­ற­வா­ளி­கள் சட்­டப்­படி தண்­டிக்­கப்­பட்­டுள்­ள­னர். இதன் மூலம், நம் நாட்­டின் சட்­டம், கொள்கை குறித்து எவ்­வி­தக் கேள்­வி­களும் எழாத வகை­யில், ஜன­நா­ய­கத்­தைக் கட்­டிக் காப்­பாற்­றி­யுள்­ளது. இதற்கு அப்­பால், தாக்­கு­த­லில் பாதிக்­கப்­பட்ட அனை­வ­ரை­யும் இன்­றைக்கு நான் நினைவு கூர்கிறேன்," என்று உருக்­க­மா­கக் கூறி­னார்.