ஜொகூர் பாருவில் உள்ள ஒரு கடைத்தொகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சிங்கப்பூர் வாகனத்தின் முக்கிய பாகங்கள் திருட்டுபோயின.
கேஎஸ்எல் கடைத்தொகுதியின் வாகன நிறுத்துமிடத்தில் இருந்த வாகனத்தின் சக்கரங்களும் முக்கிய சக்கர பாகங்களும் திருடப்பட்டன. சக்கரங்களை அகற்ற பயன்படுத்தப்பட்ட கருவி அங்கே விட்டுசெல்லப்பட்டது.
சக்கரங்கள் அகற்றப்பட்ட நிலையில் உள்ள வாகனத்தை காட்டும் காணொளி டிக்டாக் தளத்தில் பகிர்ந்துகொள்ளப்பட்டது. சம்பவம் ஜூலை 9 அன்று நடந்ததாக காணொளியில் குறிப்பு இருந்தது. பதிவு செய்யப்பட்ட 12 மணி நேரத்தில் இணையவாசிகள் இதை 400,000 முறை பார்த்துள்ளனர்.
காணொளியைக் கண்ட பல சிங்கப்பூரர்கள் தாங்கள் இந்தக் கடைத்தொகுதிக்கு அடிக்கடி செல்வதாகக் குறிப்பிட்டனர். ஆனால் இதுவரை தங்களுக்கு எந்தவொரு அசம்பாவிதமும் நடந்ததில்லை என்று அவர்கள் கூறினர்.
கேஎஸ்எல் கடைத்தொகுதி உட்லண்ஸ் சோதனைச் சாவடி அருகே அமைந்துள்ளதால் பல சிங்கப்பூரர்கள் அங்கு செல்வது வழக்கம்.

