வேதனையுடன் அபேக்கு இறுதி மரியாதை செலுத்திய ஜப்பான்

வேதனையுடன் அபேக்கு இறுதி மரியாதை செலுத்திய ஜப்பான்

1 mins read
ae4180d0-a398-4221-af8c-1d005f541fa8
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் நல்லுடல் உள்ள வாகனம். படம்: ராய்ட்டர்ஸ் -

தோக்­கியோ: மறைந்த ஜப்­பா­னின் முன்­னாள் பிர­த­மர் ஷின்சோ அபே­யின் இறு­திச் சடங்கு நேற்று நடை­பெற்­றது. திரு அபே, ஆக அதிக காலம் ஜப்­பா­னின் பிர­த­ம­ரா­கப் பதவி வகித்­த­வர்.

தலை­ந­கர் தோக்­கி­யோ­வில் அவ­ரின் நல்லுடல் ஊர்­வ­ல­மா­கக் கொண்டு செல்­லப்­பட்­டது. அதைக் காண நடை­பா­தை­களில் மக்­கள் திரண்டனர்.

காவல்­து­றை­யின் பலத்த பாது­காப்­புக்கு மத்­தி­யில் கூட்­டம் கூடி­யது. சிலர் நேற்று காலை­யி­லி­ருந்தே நீண்ட வரி­சை­யில் நின்று காத்­தி­ருந்­த­னர்.

மக்­களில் பலர் கத்­தி­ய­படி கைத்­தட்டி மரி­யாதை செலுத்­தி­னர். சிலர் கைகளில் மலர்­களை வைத்­தி­ருந்­தனர்.

"எங்­கள் நாட்­டிற்கு நீங்­கள் ஆற்­றிய பங்­கிற்கு மிக­வும் நன்றி,'" என்று ஓர் ஆட­வர் தொடர்ந்து உரக்கக் கத்தினார். வானில் பல ஹெலி­காப்­டர்­களும் நிகழ்­வில் ஈடு­பட்­டன.

சென்ற வாரம் தாம் பங்கேற்ற தேர்­தல் பிர­சா­ரத்­தில் 67 வய­தான திரு அபே சுட்­டுக் கொல்­லப்­பட்டார்.

சுமார் 2,500 பேர் நேற்று அவரின் இறு­திச் சடங்­கில் கலந்­து­கொண்­ட­னர். ஜப்­பா­னி­யப் பிர­த­மர் ஃபுமியோ கிஷிடா, எதிர்­கட்­சித் தலை­வர் கென்டா இஸுமி உள்­ளிட்­டோர் அவர்­களில் அடங்­கு­வர்.

ஜப்­பா­னின் அர­ச­ர் நரு­ஹிட்டோ, அர­சி­யார் மசாக்கோ ஆகி­யோ­ரும் மலர்­க­ளை­யும் ஊது­பத்­தி­க­ளைக் கொளுத்­து­வ­தற்­கான கூடத்­தை­யும் வழங்­கி­னர்.

உலக நாடு­க­ளி­லி­ருந்து கிட்­டத்­தட்ட 2,000 அனு­தா­பக் குறிப்­பு­கள் அனுப்­பப்­பட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது. அமெ­ரிக்க வெளி­யு­றவு அமைச்­சர் ஆண்டனி பிளிங்­கன் உள்­ளிட்ட தலை­வர்­கள் திரு அபேக்கு மரி­யாதை செலுத்த ஜப்­பான் சென்­ற­னர்.