ஜப்பானிய தூதரைச் சந்தித்த சிங்கப்பூர் பிரதமர்

ஜப்பானிய தூதரைச் சந்தித்த சிங்கப்பூர் பிரதமர்

1 mins read
2abfa564-a163-4a6e-90ca-84f46857cedb
திரு அபேக்கு மரியாதை செலுத்தும் திரு லீ (வலது), அவரின் மனைவி. படம்: தொடர்பு, தகவல் அமைச்சு -

சிங்­கப்­பூர்: திரு ஷின்சோ அபேக்கு மரி­யாதை செலுத்த சிங்­கப்­பூ­ருக்­கான ஜப்­பா­னிய தூத­ர் ஜுன் யாமா­ஸாக்­கியை அவ­ரின் இல்­லத்­தில் சந்­தித்­தார் சிங்­கப்­பூர் பிர­த­மர் லீ சியன் லூங். திரு அபேக்கு அனு­தா­பங்­க­ளைத் தெரி­விக்­கும் புத்­தகத்­தில் கையெ­ழுத்­திட்டு திரு லீயும் அவ­ரின் மனை­வி­யும் மரி­யாதை செலுத்­தி­னர்.

திரு அபே, சிங்­கப்­பூ­ரின் நல்ல நண்­பர் என்று திரு லீ சென்ற வாரம் ஃபேஸ்புக்­கி­ல் குறிப்­பிட்டார்.

மேலும், சிங்­கப்­பூ­ரில் உள்ள 'ஜேசிசி' எனும் ஜப்­பான் படைப்பாக்க நிலை­யத்­திற்­குச் சென்று மக்­கள் பலர் திரு அபேக்கு மரி­யாதை செலுத்­தி­னர். பொது­மக்­கள் கையெழுத்­திட ஓர் அனு­தா­பப் புத்­தகத்தை சிங்­கப்­பூ­ரின் ஜப்­பா­னிய தூத­ர­கம் அந்­நி­லை­யத்­தில் வைத்தது. சுமார் 400 பேர் நிலையத்திற்கு வருகை தந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.