வெல்லிங்டன்: நியூசிலாந்தில் கடுமையான எல்லைக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருவதைத் தொடர்ந்து அந்நாட்டினர் பலர் வெளிநாடுகளுக்குச் சென்று வேலை தேடும் முயற்சியில் இறங்கியுள்ளனர். அதனால் ஏற்கெனவே பிரச்சினைகளைச் சந்தித்த நியூசிலாந்தின் வேலைச் சந்தை மேலும் சவால்களை எதிர்நோக்கி வருகிறது.
கடந்த மே மாதத்திற்கு முன்பு ஓராண்டு காலத்தில் 10,674 பேர் அந்நாட்டைவிட்டு வெளியேறிவிட்டனர்.
அடுத்த ஆண்டு அதிக எண்ணிக்கையில் வெளிநாட்டு ஊழியர்கள் நியூசிலாந்துக்கு வருகை தருவர் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அதுவரை அதிகமானோர் தொடர்ந்து நாட்டிலிருந்து வெளியேறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேலைக்கு ஆள்சேர்க்க நியூசிலாந்து சிரமப்பட்டு வருகிறது. அந்நாட்டில் வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையும் மிகவும் குறைவு. மேலும், நியூசிலாந்தில் பணவீக்கம் மோசமடையாமல் இருக்க இனி அதிகமானோரை வேலைக்கு எடுக்கமுடியாத நிலையும் உருவாகியுள்ளது.

