பெட்டாலிங் ஜெயா: ஒரே நேரத்தில் கொவிட்-19, சளிக்காய்ச்சல் இரு வகை கிருமித்தொற்றுக்கும் ஒருவர் ஆளாகலாம் என்று மலேசியாவின் சுகாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அவ்வாறு நேர்ந்தால் அது உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடும் என்றும் அவர்கள் எச்சரித்தனர்.
சளிக்காய்ச்சல், கொவிட்-19 ஆகிய இரண்டுக்கும் வித்தியாசத்தை அறிவது சிரமம். மருத்துவப் பரிசோதனைகளின் மூலம்தான் தெரிந்துகொள்ளமுடியும் என்று வல்லுநர்கள் கூறினர்.
இருவகை கிருமித்தொற்றும் ஒரே நேரத்தில் ஏற்படும்போது அதற்குப் பெயர் 'ஃப்ளூரோனா'. அது நிகழ்வது அரிதானாலும் நிகழாது எனச் சொல்லமுடியாதென வல்லுநர்கள் குறிப்பிட்டனர். இம்மாதம் மூன்று, ஒன்பதாம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் மலேசியாவில் சளிக்காய்ச்சலுக்கு ஆளானோரின் எண்ணிக்கை அதற்கு முந்தைய வாரத்தில் பதிவானதைவிட 10.7 விழுக்காடு அதிகரித்தது.