மாஸ்கோ: ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரேனின் நோவா காக்கோவா பகுதியில் உக்ரேன் மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதலில் குறைந்தது ஏழு பேர் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 70 பேர் காயமடைந்துள்ளனர்.
அந்நகரில் ரஷ்யாவால் நியமிக்கப்பட்ட அரசாங்கம் இந்த தகவல்களைத் தெரிவித்தது.
உக்ரேனின் தெற்குப் பகுதியில் உள்ள கெர்சன் நகரில் நோவா காக்கோவா இருக்கிறது. அங்கு ஆயுதங்கள் வைக்கப்பட்டிருந்த கிடங்கை உக்ரேன் அழித்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதியன்று உக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்ததைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் மாண்டுவிட்டனர்.

