செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி பிரிட்டிஷ் பிரதமர் பற்றி அறிவிப்பு

செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி பிரிட்டிஷ் பிரதமர் பற்றி அறிவிப்பு

1 mins read
068be346-c62a-4f2e-bcd4-1bbb299cfcf0
-

லண்­டன்: வரும் செப்­டம்­பர் மாதம் ஐந்­தாம் தேதி­யன்று பிரிட்­ட­னின் அடுத்த பிர­த­மர் யார் என்­பது அறி­விக்­கப்­படும்.

பிர­த­மர் பத­வி­யி­லி­ருந்து வில­கும் போரிஸ் ஜான்­ச­னின் இடத்­தைப் பிடிக்க இது­வரை 11 பேர் முன்­வந்துள்­ள­னர். அவர்­களில் இந்­தி­யா­வின் இன்­ஃபோ­சிஸ் நிறு­வ­னத்­தைத் தொடங்­கிய திரு நாரா­ய­ண­மூர்த்­தி­யின் மரு­ம­க­னான திரு ரிஷி சுனக்­கும் ஒரு­வர்.

பிர­த­ம­ரைத் தெரி­வு­செய்­வ­தற்­கான அர­சி­யல் தலை­வர்­க­ளி­டையே நடை­பெ­ற­விருக்கும் வாக்­க­ளிப்­பின் முதல் சுற்று இன்று நடை­பெ­றும். அதில் பங்­கேற்­கும்­ ஒவ்­வொ­ரு­வ­ரும் குறைந்­தது 20 நிய­ம­னங்­க­ளைப் பெற்­றால்­தான் அடுத்த சுற்­றுக்­குத் தகு­தி­பெ­ற­மு­டி­யும்.