உலக நாடுகளில் அதிகரிக்கும் வெப்பநிலை; ஐரோப்பாவில் பற்றி எரியும் காடுகள், நிலங்கள்

உலக நாடுகளில் அதிகரிக்கும் வெப்பநிலை; ஐரோப்பாவில் பற்றி எரியும் காடுகள், நிலங்கள்

2 mins read
a6df286b-69d8-40bb-9bc9-22da69d4b8a4
தெற்கு பிரான்சில் 800 ஹெக்டர் பரப்பளவில் பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பாளர்கள்.படம்: ஏஎஃப்பி -

பெய்­ஜிங்: சீனா­வின் பல நக­ரங்­களில் செவ்­வாய்க்­கி­ழ­மை­யன்று ஆக அதிக வெப்­ப­நிலை பதி­வா­ன­தா­க­வும் இதே நிலை மேலும் சில நாள்­க­ளுக்கு நீடிக்­கும் என்று எதிர்­பார்ப்­ப­தா­க­வும் உள்­ளூர் வானிலை மையம் தெரி­வித்­தது.

சீனா முழு­வ­தும் வெப்­ப­நி­லைக்­கான சிவப்பு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டது. அந்­நாட்­டின் வெப்­ப­நிலைக்­கான மூன்று அடுக்கு எச்­ச­ரிக்கை நிலை­யில், அதி­க­பட்ச எச்­ச­ரிக்­கை­யா­கும் அது.

கிழக்கு ஜியாங்சு மாநி­லத்­தின் சில இடங்­கள், ‌ஷாங்­காய் ஆகிய பகு­தி­களில் இதற்கு முந்­திய ஜூலை மாதங்­களில் பதி­வா­ன­தை­விட, ஆக அதிக வெப்­ப­நிலை தற்போது பதிவாகியுள்ளது.

வர­லாற்­றி­லேயே முதல்­மு­றை­யாக ஜியாங்சு மாநி­லத்­தின் யிஸிங் நக­ரில் வெப்­ப­நிலை 41.3 டிகிரி செல்­சி­ய­சாக இருந்­தது.

நீண்டநேர அதி­க­பட்ச வெப்­ப­நிலை கார­ண­மாக ஒரு சிலர் மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட நேர்ந்­த­தா­க­வும் சீனா­வின் சமூக ஊடக விவா­தங்­கள் காட்­டின.

கிட்­டத்­தட்ட இரண்டு மாதங்­களாக வெப்­ப­நிலை 30 டிகிரி செல்­சி­ய­சுக்­கும் மேல் இருப்­ப­தாக சமூக ஊட­கத்­தில் ஒரு­வர் பதி­விட்­டி­ருந்­தார்.

இதை­ய­டுத்து, மக்­க­ளைப் பாது­காக்­கும் நட­வ­டிக்­கை­களை அந்­நாட்­டின் நகராட்சிகள் மேற்­கொண்டு வரு­கின்­றன.

இதற்­கி­டையே, பிரான்ஸ், பிரிட்­ட­னி­லும் வெப்­ப­நிலை அதி­க­ரித்­துக்­கொண்டே வரு­கின்­றன. மேற்கு ஐரோப்­பா­வில் நில­வும் வெப்­ப­அலை கார­ண­மாக அங்கு காட்­டுத்தீ சம்­ப­வங்­கள் மூண்­டன. இதைக் கட்டுப்­படுத்த தீய­ணைப்­பா­ளர்­கள் இரவு பகல் பாரா­மல் போராடி வரு­கின்­ற­னர்.

சென்ற ஞாயிற்­றுக்­கி­ழமை முதல் ஸ்பெ­யின், போர்ச்­சு­க­ல் நாடு­களில் வெப்­ப­நிலை 40 டிகிரி செல்­சி­ய­சாக இருந்து வரு­கிறது.

செவ்­வாய்க்­கி­ழமை முதல் தெற்கு பிரான்­சில் 800 ஹெக்­டர் பரப்­ப­ள­வில் பற்றி எரி­யும் காட்­டுத்­தீ­யால், கிட்­டத்­தட்ட 150 பேர் தங்­கள் வீடு­க­ளை­விட்டு வெளி­யேற வேண்­டிய நிலை ஏற்­பட்­டது.

பரு­வ­நிலை மாற்­றம் கார­ண­மாக வெப்­ப­அ­லை­கள் அடிக்­கடி ஏற்­ப­டு­வ­தாக விஞ்­ஞா­னி­கள் கூறு­கின்­ற­னர்.

உலக வெப்­ப­நிலை அதி­க­ரிக்­கும்போது, ​​​​காலப்­போக்­கில் அது மேலும் தீவிரமடையும் என்று அவர்­கள் கரு­து­கின்­ற­னர்.

தற்­போது நிலவும் வெப்­ப­நிலை மேலும் மோச­ம­டை­யக்­கூ­டும் என்று உலக வானிலை ஆய்வு மையத்­தின் செய்­தித் தொடர்­பா­ளர் கிளாரி சொன்­னார்.