தோக்கியோ: ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயைச் சுட்டுக்கொல்வதற்கு முந்திய நாள் கொலையாளி துப்பாக்கியைப் பரிசோதித்ததாக தெரிய வந்துள்ளது.
அபேயைச் சுட்டுக்கொன்றதாகக் கருதப்படும் டெட்சுயா யமகாமி, சர்ச்சைக்குரிய தேவாலயத்தால் முன்பு பயன்படுத்தப்பட்ட கட்டடத்தில் தமது துப்பாக்கியைப் பரிசோதித்ததாக தேவாலயம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. அப்போது யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.
கொலையாளி என்று சந்தேகிக்கப்படும் டெட்சுயாவின் தாயார்தான் தங்கள் தேவாலயத்தில் உறுப்பினர் என்றும் டெட்சுயா உறுப்பினர் அல்ல என்றும் தேவாலயம் மீண்டும் உறுதிப்படுத்தியது.
தமது தாயாரின் நிதி நிலைமை மோசமானதற்கு அந்த தேவாலயத்திற்கு அவர் அளித்த நன்கொடைதான் காரணம் என்று டெட்சுயா சொன்னான்.
எனவே, அந்த தேவாலயத்தின் மூத்த உறுப்பினர் ஒருவரைத் தாம் கொல்ல நினைத்ததாகவும் ஆனால் அந்த சமயக் குழுவிற்கும் முன்னாள் பிரதமர் அபேவிற்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததாக தாம் கருதியதால் அவரைச் சுட்டதாகவும் அவன் சொன்னான்.
சென்ற வெள்ளிக்கிழமை அபே சுட்டுக்கொல்லப்பட்டார்.

