பெய்ஜிங்: அமெரிக்காவின் நாசகாரக் கப்பல் ஒன்றை தென்சீனக் கடல் பகுதியில் இருந்து விரட்டி அடித்ததாக சீனா கூறியுள்ளது.
தென்சீனக் கடல் பகுதியில் உள்ள சர்ச்சைக்குரிய பாராசெல் தீவுக்கு அருகில் சட்டவிரோதமாக அக்கப்பல் நுழைந்ததாகவும் அது சொன்னது. அனைத்துலக சட்டங்களுக்கு உட்பட்டுதான் அப்பகுதியில் தனது கப்பல்கள் அங்கு சென்றதாக அமெரிக்கா கூறுகிறது.
தென்சீனக் கடலின் சில பகுதிகளில் சீனா அத்துமீறி கட்டுப்பாடுகளை விதிப்பதாகவும் அமெரிக்கா கூறி வருகிறது.

