ஷங்காயில் கட்டுக்குள் வந்த கிருமித்தொற்றுச் சம்பவங்கள்

ஷங்காயில் கட்டுக்குள் வந்த கிருமித்தொற்றுச் சம்பவங்கள்

1 mins read
9cae0f61-417d-40c0-92ed-a07a11f66aea
-

ஷங்­காய்: சீனா­வின் ஷங்­காய் நக­ரில் கடந்த ஒரு வாரத்­தில் பதி­வாகாத அளவு குறை­வான கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுச் சம்­பவங்­கள் பதி­வா­கி­யுள்­ளன. அத­னால் அந்­ந­க­ரில் கட்­டுப்­பா­டு­கள் கடு­மை­யாக்­கப்­ப­டா­மல் இருக்­க­லாம் என்ற நம்­பிக்கை பிறந்­துள்­ளது.

ஷங்­கா­யில் நேற்று முன்­தி­னம் 47 கிரு­மித்­தொற்­றுச் சம்­ப­வங்கள் பதி­வா­யின. நேற்று முன்­தி­னம் பதிவான­தை­விட அந்த எண்­ணிக்கை குறைவு. எனி­னும், அந்நகரில் மீண்­டும் முடக்­க­நிலை நடப்­புக்கு வர­லாம் என்ற அச்­சம் இன்­ன­மும் இருந்தே வரு­கிறது.

கொவிட்-19 கிரு­மிப் பர­வலை முற்­றி­லும் ஒழிக்­க­வேண்­டும் என்ற அணு­கு­மு­றையை சீனா தொடர்ந்து பின்­பற்றி வரு­கிறது.

இதற்­கி­டையே, ஹாங்­காங்­கில் நிறக் குறிப்­பைக் கொண்டு கிருமிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்தும் முறை கிரு­மித்­தொற்­றுக்கு ஆளா­னோர், அங்கு வரும் பய­ணி­கள் ஆகி­யோ­ருக்கு மட்­டுமே பொருந்­தும் என்று சில உள்­ளூர் ஊட­கங்­கள் தெரி­வித்­தன. ஹாங்­காங்­கின் அனைத்து மக்களுக்கும் அது பயன்­ப­டுத்­தப்­ப­டாது என்று கூறப்­ப­டு­கிறது. இந்த முறை சீனா­வில் அனை­வ­ருக்­கும் கட்டாயமாக்கப்பட்டது.