ர‌‌ஷ்யா மீண்டும் ஏவுகணைத் தாக்குதல்; 23 பேர் மரணம்

ர‌‌ஷ்யா மீண்டும் ஏவுகணைத் தாக்குதல்; 23 பேர் மரணம்

1 mins read
ba320510-76b0-415a-9c92-a798bc82e9b3
-

கியவ்: உக்­ரே­னில் ர‌ஷ்யா நடத்­திய மற்­று­மோர் ஏவு­க­ணைத் தாக்­கு­த­லில் குழந்­தை­கள் உட்­பட 23 பேர் கொல்­லப்­பட்­ட­னர்.

உக்­ரேன் தலை­ந­கர் கியவ்­வில் இருந்து 268 கிலோ­மீட்­டர் தூரத்­தில் உள்ள மத்­திய பகு­தி­யான வினிட்­சியா நக­ரில் ர‌ஷ்யா நேற்று முன்­தி­னம் தாக்­கு­த­லில் ஈடு­பட்­டது.

அங்­குள்ள முக்­கிய அரசு அலு­வ­லக கட்­ட­டம் மீது சர­மா­ரி­யாக ஏவு­க­ணை­களை வீசி தாக்­கு­தல் நடத்­தி­யது.

இதில் அந்த கட்­ட­டம் மட்­டும் அல்­லா­மல் அரு­கில் இருந்த குடி­யி­ருப்­புக் கட்­ட­டங்­களும் கடு­மை­யாக சேதம் அடைந்து, தீப்­பி­டித்து எரிந்­தன.

இந்தத் தாக்­கு­த­லில் 3 குழந்­தை­கள் உட்­பட 23 அப்­பாவி பொது­மக்­கள் இறந்­த­னர். 90க்கும் மேற்­பட்­ட­வர்­கள் படு­கா­யம் அடைந்­த­னர்.

அடுத்­த­டுத்து 8 முறை நடந்த ஏவு­கணை வீச்­சில் 50க்கும் மேற்­பட்ட கார்­கள், வாக­னங்­கள் தீயில் கரு­கின.

ர‌ஷ்­யா­வின் இந்த தாக்­கு­த­லுக்கு உக்­ரே­னிய அதி­பர் ஸெலன்ஸ்கி கடும் கண்­ட­னம் தெரி­வித்து உள்­ளார்.

பொது­மக்­கள்­மீது வேண்­டு­மென்றே குறி­வைத்து இந்த ஏவு­கணை தாக்­கு­தல் நடத்­தப்­பட்டு உள்­ள­தாக அவர் குற்­றம்­சாட்­டி­னார்.

இதற்­கி­டையே, ர‌ஷ்ய ஆக்­கி­ர­மிப்பு பகு­தி­களில் அதி­க­மா­னோர் மண்­ணில் புதைக்­கப்­பட்­டுள்­ள­தாக அரசு சாரா நிறு­வ­னம் ஒன்று கூறி­யுள்­ளது.