சிறுபான்மையினர் பாரம்பரியத்தை காக்க சீன அதிபர் அழைப்பு

சிறுபான்மையினர் பாரம்பரியத்தை காக்க சீன அதிபர் அழைப்பு

1 mins read
2c22ca74-d9b1-49b6-988a-78767696bc89
சீனாவின் மேற்கு பகுதியில் உள்ள உரும்கிக்குச் சென்றிருந்த அந்நாட்டு அதிபர் ஸி ஜின்பிங், சிறுபான்மை குழுக்களின் கலாசார, பாரம்பரியத்தைப் பாதுகாக்க வலியுறுத்தினார். படம்: சின்ஹுவா -

பெய்­ஜிங்: சீன அதி­பர் ஸி ஜின்­பிங், பல ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு, அந்­நாட்­டின் ஸின்­ஜி­யாங் பகு­திக்­குச் சென்­றார்.

மேற்கு வட்­டா­ரத்­தின் தலை­ந­க­ரான உரும்­கிக்­குச் சென்­றி­ருந்த அவர், கட்­சி அமைப்பை வலுப்­படுத்­த­வும் சிறுபான்மை இனத்­த­வர்­கள் உட்பட அனைவரும் பய­ன­டை­யும் வகை­யில் சேவை­ வழங்­க­வும் அழைப்பு விடுத்­த­தாக சின்­ஹுவா செய்தி கூறி­யி­ருந்­தது.

செவ்­வாய், புதன்­கி­ழமை இரண்டு நாள்­கள் அவர் அவ்­வட்­டா­ரத்­தில் இருந்­தார்.

சென்ற 2014ஆம் ஆண்­டில் உரும்­கி­யில் உள்ள ரயில் நிலை­யத்­தில் கத்தி, வெடி­குண்­டு­கள் கொண்டு தீவி­ர­வாத தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டது. அதில் மூவர் கொல்­லப்­பட்­ட­னர். பலர் காய­ம­டைந்­த­னர்.

அப்­போது, தீவி­ர­வா­தத்­திற்கு எதி­ராக கடு­மை­யான நட­வ­டிக்­கை­களை எடுக்­கு­மாறு அதி­பர் ஜின்­பிங் உத்­த­ர­விட்­டார்.

அத்­து­டன் 1 மில்­லி­யன் உய்­கர் இனத்­த­வர்­கள், பிற சிறு­பான்­மை­யி­னர்­க­ளை அதிபர் ஜின்பிங் தலைமையிலான சீன அர­சாங்­கம் தடுப்பு முகாம்­களில் வைத்­தது.