நியூயார்க்: உலகளவில் குழந்தைகளுக்கான தடுப்பூசி போடும் விகிதம் பெருமளவு சரிவு கண்டுள்ளதாக ஐநா கூறியுள்ளது.
இதற்கு கொவிட்-19 கிருமிப் பரவலால் விநியோக சங்கிலியில் ஏற்பட்ட இடையூறும், தடுப்பூசி பற்றிய தவறான தகவல்களுமே காரணம் என்றும் அது சொன்னது.
டிப்தீரியா, டெட்டனஸ், பெர்டுசிஸ் ஆகியவற்றுக்கு எதிராக மூன்று தவணை தடுப்பூசியை போட்டுக்கொண்ட குழந்தைகளின் விழுக்காடு 2019-2021க்கு இடையில் ஐந்து விழுக்காடு குறைந்துவிட்டதாக உலகச் சுகாதார நிறுவனம் சொன்னது. 2021ல் கிட்டத்தட்ட 25 மில்லியன் பிள்ளைகளும் 2020ல் ஏறத்தாழ இரண்டு மில்லியன் பிள்ளைகளும் 2019ல் ஆறு மில்லியன் பிள்ளைகளும் முத்தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை. இவர்களில் 18 மில்லியன் ஒரு முறைகூட தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை.
இதனால் பிள்ளைகள், தடுப்பூசியால் தடுக்கக்கூடிய நோய்களுக்கு எளிதில் ஆளாகும் ஆபத்து அதிகம் என்றும் அது எச்சரித்து உள்ளது. படம்: ராய்டடர்ஸ்

