ஜகார்த்தா: இந்தோனீசியாவின் கிழக்குப் பகுதியான பாப்புவாவில் நேற்றுக் காலை நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.
ஆயுதம் ஏந்திய பிரிவினைவாதிகள் சிலர் இந்தத் துப்பாக்கிச்சூட்டை நடத்தியதாக நம்பப்படுகிறது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
அண்மைய ஆண்டுகளில் ஆக மோசமானதாகக் கூறப்படும் இந்தத் துப்பாக்கிச்சூடு, டுகா எனும் தொலைதூரப் பகுதியில் நடந்ததாக பாப்புவா மாநிலத் தலைநகர் ஜெயபுராவில் உள்ளூர் ஊடகங்களிடம் காவல்துறை கூறியது.
இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் அதிகாரிகள், குடியிருப்பாளர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றும் பணியில் கவனம் செலுத்தினர்.
பாப்புவா வட்டாரம் தற்போதைய இரண்டிலிருந்து ஐந்து மாநிலங்களாகப் பிரிக்கப்படும் என்று புதிய சட்டம் ஒன்று இயற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டங்கள் எழுந்துள்ளதைத் தொடர்ந்து இந்தத் துப்பாக்கிச்சூடு நடந்தது.
எனினும் வளங்கள் நிறைந்த பகுதியான பாப்புவாவின் கட்டுப்பாட்டில் இந்த நடவடிக்கை இந்தோனீசியாவுக்குக் கூடுதல் அதிகாரத்தை வழங்கும் என்று விமர்சகர்கள் கருதுகின்றனர்.

