ஆயுதங்களை ஏற்றிச் சென்ற விமானம் விபத்து: 8 பேர் மரணம்

ஆயுதங்களை ஏற்றிச் சென்ற விமானம் விபத்து: 8 பேர் மரணம்

1 mins read
f2f2136a-c2f2-4cac-8d96-03c812a03c24
-

கவாலா: ஆயு­தங்­களை ஏற்­றிச் சென்ற சரக்கு விமா­னம் ஒன்று கிரிஸ் நாட்­டில் விபத்துக்கு உள்­ளா­ன­தில், அதி­லி­ருந்த எட்டுப் பேர் மாண்­டு­விட்­ட­னர்.

அன்­டோவ் அன்-12 எனும் அந்த உக்­ரே­னிய விமா­னம் கிட்­டத்­தட்ட 11 டன் ஆயு­தங்­களை பங்­ளா­தே­‌ஷிற்கு ஏற்­றிச் சென்­ற­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

பெரிய நெருப்பு பந்து ஒன்று விழு­வ­தைப் போல் அந்த விமா­னம் எரிந்­து­கொண்டே கீழே விழு­வதை இணை­யத்­தில் பர­வும் காணொ­ளி­கள் காட்­டு­கின்­றன.

செர்­பி­யா­வில் இருந்து உள்­ளூர் நேரப்­படி சனிக்­கி­ழமை இரவு புறப்­பட்ட அந்த விமா­னம் ஜோர்­டான் நோக்கி சென்று கொண்­டி­ருந்­தது. தொழில்­நுட்ப கோளாறு கார­ண­மாக கவாலா விமான நிலை­யத்­தில் அந்த விமா­னம் அவ­ச­ர­மாகத் தரை­யி­றங்­க­வி­ருந்­தது. ஆனால், விமான நிலை­யத்­திற்கு 40 கி.மீ. தொலை­வுக்கு முன்பே அது விபத்­தில் சிக்­கி­யது.

கீழே விழுந்த விமா­னம் கிட்­டத்­தட்ட இரண்டு மணி நேரத்­திற்­கும் மேலாக கொழுந்­து­விட்டு எரிந்­த­தாக அப்­ப­கு­தி­வா­சி­கள் கூறு­கின்­ற­னர்.

எரிந்த விமா­னத்­தில் இருந்து நச்­சு­க்காற்று வெளியேறக்­கூ­டும் என்­ப­தால், ஆள் இல்லா வானூர்தி மூலம் விபத்து பகுதி கண்­கா­ணிக்­கப்­பட்­டது. அப்­ப­கு­தி­யைச் சுற்றி 2 கி.மீட்­டர் தூரத்­திற்கு மக்­கள் வீட்­டை­விட்டு வெளியே வர­வேண்­டாம் என்­றும் கூறப்­பட்­டுள்­ளது.