ஷாங்காயில் மோசமடையும் கிருமிப் பரவல்

ஷாங்காயில் மோசமடையும் கிருமிப் பரவல்

1 mins read
29b21735-286d-4df4-b936-d600ebccfbe0
-

ஷாங்­காய்: பெரும்­பா­லான பகு­தி­களில் கிரு­மிப் பர­வல் மோசம­டைந்­துள்­ள­தால், சீனா­வில் அன்­றாட தொற்று எண்­ணிக்கை தொடர்ந்து அதி­க­ரித்­து­க்கொண்டே வரு­கிறது. அதி­லும் ‌ஷாங்­காய் நக­ரில் நிலைமை மிக­வும் மோச­மாக இருப்­ப­தாக அதன் சுகா­தார துணை தலை­வர் ஸாவ் டன்­டன் சொன்­னார்.

சீனா­வில் சனிக்­கி­ழ­மை­யன்று 580 புதிய தொற்­றுச் சம்­ப­வங்­கள் பதி­வா­ன­தாக தேசிய சுகா­தார ஆணை­யம் சொன்­னது. இந்த ஆண்டு மே மாதம் 23ஆம் தேதிக்­குப் பிறகு ஆக அதிக எண்­ணிக்­கை­யா­கும் இது.

குவாங்­சி­யில் முந்­திய நாளில் 40ஆக இருந்த தொற்று பாதிப்பு நேற்று 244ஆனது.

‌ஷாங்­கா­யில் தனி­மைப்­ப­டுத்­தல் மையங்­க­ளுக்கு வெளியே இம்­மா­தம் 3ஆம் தேதிக்­குப் பிறகு 3 தொற்று சம்­ப­வங்­கள் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளன. அங்கு நேற்று மட்­டும் மொத்­தம் 26 பேருக்­குத் தொற்று உறுதி செய்­யப்­பட்­டது.

இத­னால் சீனா­வின் அதி­க­மான பகு­தி­கள் முடக்­கப்­பட்­டுள்­ளன. தொழில்­கள், உற்­பத்­தி­ பாதிக்­கப்­பட்­டுள்­ளன. முடக்­க­நிலை கார­ண­மாக இரண்­டாம் காலாண்­டிற்­கான பொரு­ளி­யல் வளர்ச்சி 0.4 விழுக்­கா­டாக குறைக்­கப்­பட்­டுள்­ளது. எனவே, 5.5 விழுக்­கா­டாக முன்­னு­ரைக்­கப்­பட்­டி­ருந்த ஆண்டு பொரு­ளி­யல் வளர்ச்­சியை எட்­டு­வது சிர­மம் என்று கூறப்­ப­டு­கிறது.