மாஸ்கோ: ரஷ்யாவுக்கு எதிரான தாக்குதல்களுக்கு உக்ரேன் மேற்கத்திய நாடுகளில் இருந்து அனுப்பப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்துகிறது. எனவே, உக்ரேனின் நீண்ட தூர இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளைக் குறிவைத்து தாக்கி அழிக்க, ரஷ்ய தற்காப்பு அமைச்சர் செர்ஜி சோயிகு உத்தரவிட்டுள்ளார்.
ரஷ்யக் கட்டுப்பாட்டில் உள்ள குடியிருப்புப் பகுதிகளை அழிப்பதற்கு உக்ரேன் அந்த ஆயுதங்களைப் பயன்படுத்தியதாகவும் மேலும் வயல்கள், தானியக் கிடங்கு
களையும் உக்ரேன் படை தீ வைத்து அழித்துவிட்டதாகவும் ரஷ்யத் தற்காப்பு அமைச்சு சொன்னது.
ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் பல பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை உக்ரேனுக்கு வழங்கி வருகின்றன.
அவற்றைக் கொண்டு ரஷ்யாவின் 30 ஆயுத கிடங்குகள்மீது தொடர் தாக்குதல்களை நடத்தியதாக உக்ரேன் சொன்னது.
ரஷ்யப் படையெடுப்பு தொடங்கி கிட்டத்தட்ட ஐந்து மாதங்களா கின்றன. இந்நிலையில், உக்ரேனின் ஐந்தில் ஒரு பங்கு பகுதி ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ளதாகக் கூறப்படுகிறது. டோன்பாஸ் பகுதியை கைப்பற்றுவதில் ரஷ்யா தீவிரமாக உள்ளது.
இதற்கிடையே, உக்ரேனின் இரண்டு முக்கிய உயர் அதிகாரிகளைப் அந்நாட்டு அதிபர் ஸெலன்ஸ்கி பதவி நீக்கியுள்ளார். தங்கள் துறையில் இருந்து ரஷ்ய உளவாளிகளை வேரறுக்க அவர்கள் தவறிவிட்டதாக ஸெலன்ஸ்கி சொன்னார்.
எஸ்பியூ எனும் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் இவான் பகானோவ்வும் திருவாட்டி இரினா வெனிடிக்டோவாவையும் அவர் நீக்கியுள்ளார்.
"இரண்டு துறைகளையும் சேர்ந்த கிட்டத்தட்ட 60 பேர் ரஷ்ய ஆக்கிரமிப்புப் பகுதிகளில் உக்ரேனுக்கு எதிராக வேலை செய்தனர்.
"சட்ட அமலாக்க அதிகாரிகள்மீது 651 தேசத் துரோக வழக்குகள் போடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இதுபோன்ற குற்றங்கள் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் மிக்கது. "இதற்கு அந்தந்த துறைகளின் அதிகாரிகளே பொறுப்பாவர்," என்றார் ஸெலன்ஸ்கி.

