15 நாடுகளின் ஊழியர்களுக்கு மலே­சியா அனு­மதி

15 நாடுகளின் ஊழியர்களுக்கு மலே­சியா அனு­மதி

1 mins read
fd894da2-77b9-48bb-b242-6ea899638beb
-

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வில் 15 நாடு­க­ளைச் சேர்ந்த வெளி­நாட்டு ஊழியர்­களை வேலைக்கு அமர்த்து ­வ­தற்கு அந்­நாட்டு அர­சாங்­கம் அனு­மதி வழங்கி­யுள்­ளது. தொழிற்­சாலை, கட்­டு­மா­னம், சேவை ஆகிய 3 துறை­களில் அவர்­கள் பணி­பு­ரி­ய­லாம்.

உள்­துறை அமைச்­சுக்­கும் மனி­த­வள அமைச்­சுக்­கும் இடை­யில் நடை­பெற்ற வெளி­நாட்­டு ஊழியர் நிர்­வ­கிப்பு மீதான செயற்­குழு கூட்டத்­தில், இதற்கு அனு­மதி வழங்­கப்­பட்­ட­தாக உள்­துறை அமைச்­சர் ஹம்சா சய்­னூ­டின் தெரி­வித்­

தார்.

இந்­தியா, தாய்­லாந்து, கம்­போ­டியா, நேப்­பா­ளம், மியன்­மார், லாவோஸ், வியட்­னாம், பிலிப்­பீன்ஸ், பாகிஸ்­தான், இலங்கை, பங்­ளா­தேஷ், துர்க்­மெ­னிஸ்­தான், உஸ்­பெ­கிஸ்­தான், இந்­தோ­னீ­சியா, கஜ­கஸ்­தான் ஆகிய 15 நாடு­களைச் சேர்ந்த ஊழி­யர்­கள் மலேசி­யா­வில் வேலை செய்ய அனு­ம­திக்­கப்­ப­டு­வ­தாக உள்­துறை அமைச்­சின் இணை­யத்­த­ளம் கூறு­கிறது.

அத்­து­டன் மலே­சி­யா­விற்­கு ஊழியர்களை அனுப்­பு­வதை இந்­தோ­னீ­சியா நிறுத்­தி­வைத்துள்ள விவ­கா­ரத்­தில் நில­வும் கருத்து வேறு­பாட்­டி­னைக் களைய, மனி­த­வள அமைச்­சும், குடி­நு­ழைவு துறை­யும் உட­ன­டி­யாக இந்­தோ­னீ­சிய தரப்­பு­டன் பேச்­சு­வார்த்தை நடத்­தும்­ப­டி­யும் உள்­துறை அமைச்­சர் கேட்­டுக்­கொண்­டுள்­ளார்.

எத்­த­கைய கருத்து வேறு­பாடு என்­பது பற்றி கருத்­து­ரைக்க மறுத்த அவர், இன்­னும் 2 நாள்­களில் பேச்­சு­வார்த்தை நடத்­தப்­படு­மெ­ன­வும் அவர் குறிப்­பிட்­டார்.