லாகூர்: பாகிஸ்தானில் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பிடிஐ கட்சி பெரும்பான்மை வெற்றி பெற்றது. இதையடுத்து நாடாளுமன்றத் தேர்தலை முன்கூட்டியே நடத்த இம்ரான் கான் அழைப்பு விடுத்து உள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெறக்கூடும்.
ஏப்ரல் மாதம் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் தோற்றதையடுத்து, அவர் பிரதமர் பதவியில் இருந்து விலக நேரிட்டது. எனவே, இத்தேர்தல், இம்ரான் கான் மீதான மக்களின் நம்பிக்கை பற்றிய சோதனையாக பார்க்கப்பட்டது. பஞ்சாப் சட்டசபையின் 20 இடங்களுக்கான தேர்தலில் இம்ரான் கான் கட்சி
15 இடங்களைக் கைப்பற்றியது. பாகிஸ்தான் முஸ்லிம் கட்சி
4 இடங்களை வென்றது.

