'2060 வரை வெப்பநிலை அதிகரிக்கும்'

'2060 வரை வெப்பநிலை அதிகரிக்கும்'

2 mins read
164d186f-562b-4fca-83ba-7891d5464d07
அனல்காற்றின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க, பெல்ஜியத்தில் உள்ள தாதிமை இல்லம் ஒன்றில் தண்ணீர் தொட்டிக்குள் பந்தை உதைத்து விளையாடும் மூத்தோர். படம்: இபிஏ -

ஜெனிவா: பரு­வ­நிலை மாற்­றத்­தின் கார­ண­மாக வரும் ஆண்­டு­களில் அனல்­காற்று அடிக்­கடி நிக­ழும் என்­றும் அது மோச­மா­ன­தாக இருக்­கும் என்றும் ஐநா­வின் உலக வானிலை ஆய்வு மையம் எச்­ச­ரித்­துள்­ளது.

"பரு­வ­நிலை மாற்­றத்­தின் எதிர்­மறை போக்கு 2060ஆம் ஆண்டு வரை நீடிக்­கும்," என்­றார் மையத்­தின் தலைமை செய­லா­ளர் பெட்­டேரி தலாஸ்.

"அனல்­காற்று சூழல் அடிக்­கடி ஏற்­ப­டு­கிறது. அதன் வெப்­ப­நிலை தொடர்ந்து கடு­மை­யாகி வரு­வ­தோடு, அதிக நாள்­க­ளுக்கு நீடிக்­கிறது.

"வருங்­கா­லங்­களில் அனல்­காற்று வழக்­க­மான ஒன்­றா­கி­வி­டும்," என்று அவர் சொன்­னார்.

ஐரோப்­பா­வின் பிரான்ஸ், பிரிட்­டன் உள்­ளிட்ட நாடு­களில் வெப்­ப­நிலை தொடர்ந்து அதி­க­ரித்­த­வாறே உள்­ளது.

பிரிட்­டனின் வர­லாற்­றி­லேயே முதல்­மு­றை­யாக நேற்று முன்­தி­னம் வெப்­ப­நிலை 40 டிகிரி செல்­சி­ய­சைத் தாண்­டி­யது.

அனல்­காற்று கார­ண­மாக உயி­ரி­ழப்­பு­கள் அதி­க­ரிக்­கக்­கூ­டும் என்­றும் உடல்­ந­லக்­கு­றை­வால் அதி­க­மா­னோர் பாதிக்­கப்­ப­டு­வார்­கள் என்­றும், அது ஐரோப்­பா­வின் சுகா­தார கட்­ட­மைப்பின்­மீது அழுத்தத்தை அதி­க­ரிக்­கும் என்­றும் எதிர்­பார்ப்­ப­தாக மையம் சொன்­னது.

சென்ற ஆண்டு இத்­தா­லி­யின் சிசிலி நக­ரில் 48.8 டிகிரி செல்­சி­யஸ் வெப்­ப­நிலை பதி­வா­னது. ஐரோப்­பா­வின் ஆக அதிக வெப்­ப­நி­லை­யா­கும் அது. இந்த ஆண்டு வெப்­ப­நிலை அதை­விட அதி­க­மாக இருக்­கும் என்­கிறது மையம்.

பிரான்­சின் 64 பகு­தி­களில் இது­வ­ரை­யில்­லாத அள­வுக்கு அதிக வெப்­ப­நிலை பதி­வா­னது. பல நாடு­களில் இது­வ­ரை­யில்­லாத அள­வுக்கு அதி­க­மான வெப்­ப­நிலை பதி­வா­கும் என்று கூறப்­ப­டு­கிறது.

அனல்­காற்று காரணமாக ஐரோப்­பா­வின் பல பகு­தி­களில் தீச்­சம்­ப­வங்­கள் அதி­க­ரித்­துள்­ளன.

அதிக வெப்­ப­நி­லை­யைச் சமா­ளிக்க உத­வும் வகை­யில், பரு­வ­நிலை மாற்­றத்­திற்கு ஏற்­ற­வாறு அர­சாங்­கங்­கள் கொள்­கை­களை வகுக்­க­வேண்­டும் என்றது ஐநா.

அதிக வெப்­ப­நிலை கார­ண­மாக கடும் வறட்சி நில­வு­கிறது. எனவே, உணவு உற்­பத்தி பாதிக்­கப்­பட்டு உள்­ளது.

வெப்­ப­நி­லைக்கு ஏற்றவாறு, இங்­கி­லாந்­தில் வசிக்­கும் சிங்­கப்­பூ­ரர்­கள் தங்­க­ளின் அன்­றாட வாழ்க்­கை­மு­றையை மாற்­றிக் கொண்­டுள்­ள­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சி­டம் தெரி­வித்­த­னர்.

இங்­கி­லாந்­தில் வசிக்­கும் சிங்­கப்­பூ­ரின் தேசிய நெடுந்தொலைவு ஓட்ட வீராங்­கனை சோ ருய் யோங், அனல்­காற்­றில் இருந்து தப்பிப்பதற் காக, தாம் வழக்­க­மாக மாலை­யில் மேற்­கொள்­ளும் ஓட்­டப் பயிற்­சியை அதி­காலை 5 மணிக்கு மேற்­கொள்­வ­தாக சொன்­னார்.