ஜகார்த்தா: கஞ்சாவை மருந்துவ ரீதியாக பயன்படுத்தும் வகையில் போதைப்பொருள் சட்டத்தை மறுஆய்வு செய்யும் மனுவை இந்தோ
னீசிய நீதிமன்றம் நிராகரித்து உள்ளது.
பல சமூக அமைப்புகள், பெருமூளை வாதம் கொண்ட பிள்ளை
களின் மூன்று தாய்மார்கள், சென்ற 2020ஆம் ஆண்டு இந்த மறுஆய்வுக்குத் தாக்கல் செய்தனர்.
குறிப்பிட்ட அந்த நோய்க்கு கஞ்சாவைப் பயன்படுத்தி சிகிச்சையளிப்பதற்காக அதைச் சட்டபூர்வமாக்க வேண்டும் என்று தாய்மார்கள் தங்கள் மனுவில் கூறியிருந்தனர்.
ஆனால் அதை உறுதி செய்வதற்குப் போதுமான ஆராய்ச்சிஇல்லை என்று கூறிய நீதிபதிகள் குழு, அந்த மனுவை நிராகரித்
தது.
அதேசமயம், கஞ்சாவின் மருத்துவப் பயன்பாடு குறித்து உடனடியாக ஆராய்ச்சி செய்யுமாறு அரசாங்கத்தை அவர்கள் வலியுறுத்தினர்.
அண்மையில் கஞ்சா பயிரிடுவதையும் உட்கொள்வதையும் தாய்லாந்து சட்டபூர்வமாக்கியது.