சிட்னி: ஆஸ்திரேலியாவின் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நேற்று அதிகரித்தது. எனவே, உட்புற இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிந்துகொள்ளவும் கூடுதல் தடுப்பூசி போட்டுக்கொள்ளவும் அதிகாரிகள் பரிந்துரைத்து உள்ளனர்.
மேலும் ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை பார்ப்பதற்கு நிறுவனங்கள் அனுமதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மிகவும் எளிதில் பரவக்கூடிய பிஏ.4, பிஏ.5 துணை திரிபுகளால், அங்கு கடந்த ஏழு நாள்களில் 300,000த்திற்கும் அதிகமான தொற்றுச் சம்பவங்கள் பதிவா
கின.
இரண்டு மாதங்களில் ஆக அதிகமாக நேற்று ஒரே நாளில் 53,850 தொற்றுச் சம்பவங்கள் கண்டறியப்பட்டன.
எனினும், இந்த எண்ணிக்கை இரட்டிப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
வரும் வாரங்களில் மில்லியன்கணக்கானோர் தொற்றுக்கு ஆளாகக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
கிட்டத்தட்ட 5,300 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆக அதிகமாக இந்த எண்ணிக்கை சென்ற ஜனவரி மாதம் 5,390ஆக இருந்தது.
கூடுதல் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் ஏற்பட்டுள்ள தொய்வும் சுகாதார நெருக்கடியை மோசமடையச் செய்துள்ளது.
அங்கு இதுவரை 71% மட்டுமே கூடுதல் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

