ஜெனீவா: குரங்கம்மை நோய் தொற்றுக்கு உலக சுகாதார அவசரநிலையை அறிவிக்க வேண்டுமா என்று உலக சுகாதார அமைப்பு இன்று(ஜூலை 21) முடிவு செய்யவுள்ளது.
இதற்காக உலக சுகாதார அமைப்பின் அவசரநிலை குழுவின் இரண்டாம் சந்திப்பு இன்று நடைபெற உள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளில் முதலில் தோன்றிய குரங்கம்மை நோய் தற்போது சிங்கப்பூர், இந்தியா உட்பட ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற 70க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உள்ளது.
உலக அளவில் குரங்கம்மை நோயால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 14,000க்கும் மேல் ஆகிவிட்டது என்றும் ஆப்பிரிக்காவில் 5 பேர் உயிரிழந்துள்ளனர் என உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரஸ் அதனோம் தெரிவித்துள்ளார்.