ஹாங்காங்: மனிதர்களால் வளர்க்கப்படும் பாண்டா கரடிகளிலேயே ஆக மூத்த 'அன் அன்' என்ற ஆண் கரடி 35வது வயதில் (மனிதன் 105 ஆண்டுகள் வாழ்வதற்குச் சமம்) நேற்று மரணமடைந்துவிட்டதாக ஓஷன் பார்க் என்ற ஹாங்காங் கருப்பொருள் பூங்கா அறிவித்தது.
'ஜியா ஜியா' என்ற பெயர்கொண்ட உலகின் ஆக மூத்த பெண் பாண்டா 2016ஆம் ஆண்டில் தனது 38வது வயதில் மாண்டது. இந்த இரண்டு கரடிகளையும் சீன அரசு ஹாங்காங்கிற்கு அன்பளிப்பாகக் கொடுத்து இருந்தது.

