அனைத்துலக நீதிமன்றத்தில் மியன்மார் இனப்படுகொலை விவகாரம்

அனைத்துலக நீதிமன்றத்தில் மியன்மார் இனப்படுகொலை விவகாரம்

1 mins read
291a3528-886f-475b-83e1-121ec2ce1387
கிழக்கு மியன்மாரின் கயா மாநிலத்தில், ராணுவப் படையினரால் எரித்து சேதப்படுத்தப்பட்ட கட்டடம். படம்: ஏஎஃப்பி -

யங்­கூன்: பொது­மக்­க­ளைக் கொன்­ற­தா­க­வும் துன்­பு­றுத்­தி­ய­தாக­வும் பாலி­யல் பலாத்­கா­ரம் செய்­த­­தா­க­வும் மியன்­மார் ராணுவ வீரர்­கள் பிபி­சிக்கு அளித்­த பேட்­டி­யில் ஒப்புக்கொண்­டுள்­ள­னர்.

அப்­பாவி மக்­க­ளைக் கொல்லவும் அவர்களிடம் திருடவும் தங்­க­ளுக்கு உத்­த­ர­வி­டப்­பட்­ட­தாக அவர்­கள் கூறி­னர்.

"மக்­க­ளைப் பாது­காப்­ப­தற்­காக ராணு­வத்­தில் சேர்ந்­­த­தாக நினைத்­த­போது, மக்­க­ளைக் கொல்ல உத்­த­ர­வி­டப்­பட்­டது," என்று ராணுவ வீரர் ஒரு­வர் சொன்­னார்.

சென்ற மே மாதம் மடா­ல­யத்­தில் இருந்­த­வர்­க­ளைக் கொன்ற ராணு­வப் படை­யில் தாம் இருந்­த­தாக அவர் சொன்­னார்.

ஆறு வீரர்­கள் சாட்­சி­யம் கூறி­ய­தாக பிபிசி சொன்­னது.

ராணுவ ஆட்­சியை எதிர்க்­கும் கிரா­மங்­க­ளைச் சுற்றி கண்­ணி­வெடி­க­ளைப் பதித்து, ராணுவ ஆட்சிக் குழு போர்க்­குற்­றங்­க­ளைச் செய்­வ­தாக ஆம்­னெஸ்டி இன்­டர்­நே­ஷ­னல் கூறி­யது.

இதற்­கி­டையே, சிறு­பான்மை முஸ்­லிம் ரோஹிங்­கி­யாக்­கள் மீதான இனப்­ப­டு­கொலை வழக்­கில் மியன்­மார் தெரி­வித்­துள்ள ஆட்­சே­பணை குறித்து உலக நீதி­மன்­றம் நேற்று தீர்ப்­ப­ளிக்­க­வி­ருந்­தது.

இந்த வழக்­கைத் தொடுத்த காம்­பி­யா­வி­டம் அவ்­வாறு சொல்­வ­தற்­கு முகாந்திரம் எது­வும் இல்லை என்று மியன்­மார் ராணுவ ஆட்­சிக் குழு சொன்­னது.

பங்­ளா­தே­‌ஷில் தஞ்­சம் புகுந்­தி­ருந்த ரோஹிங்­கி­யாக்­க­ளைக் கண்ட காம்பியா அதிகாரி, 57 நாடு­க­ளின் ஆத­ர­வு­டன் மியன்­மார் அர­சாங்­கத்­திற்கு எதி­ராக இனப்படுகொலை வழக்கு தொடுத்தார்.